Friday, January 28, 2011

பசுக்கள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடுக்க வேண்டும் - விஹிப!

இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றமே ஆலோசனை கூறியிருந்தும் இதுவரை மத்திய அரசு அதற்கு ஆவன செய்யாதது ஏன்?" என விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் அகில உலக தலைவர் அஷோக் சிங்கால் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கோசாலைகளில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. இந்த விபூதி விநியோக அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிசத் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் அகில உலக தலைவர் அஷோக்சிங்கால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபூதி விநியோகத்தைத் தொடங்கி வைத்து பேசும் போது, "நெற்றியில் பூசப்படும் விபூதியில் ஆன்மிக தன்மை இருக்கிறது. இதுபற்றி கீதையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கோசாலைகளில் உள்ள பசுக்களின் சாணத்தில் இருந்து மூலிகை விபூதி தயாரிக்கப்படுகிறது. இதை வட மாநிலங்களில் தயாரித்து வழங்குவதற்கு ஆவன செய்வோம்.

ஏராளமான மாடுகள் இறைச்சிக்காக நாடு முழுவதும் வெட்டப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் அதிகளவில் இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட பசுக்களைக் கொல்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் ஏனோ மத்திய அரசு தடை சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறது.

கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தால் அங்கு காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். கவர்னர்கள் தடைக்கல்லாக இருக்கிறார்கள்" என்று பேசினார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza