Wednesday, October 13, 2010

ஆஃப்கானில் தாக்குதலை பலப்படுத்த இத்தாலி ஆலோசனை

ரோம்,அக்.12:நேட்டோ கூட்டணிப் படையில் தங்களுடைய 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆஃப்கானில் தாக்குதலை வலுப்படுத்த இத்தாலி ஆலோசித்து வருகிறது.

ஆஃப்கானில் தற்பொழுது 3500 இத்தாலிய ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்களில் இதுவரை 34 பேர் கொல்லப்பட்டனர். ஆஃப்கானிஸ்தானில் இத்தாலிப் படையினர் சிறிய பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம், சிவிலியன்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கத்தான் என இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் இக்னேஷியா லா ருஸ்ஸா தெரிவிக்கிறார். இத்தாலியின் 4 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிறிய பீரங்கிகளை வைத்து நடத்தும் தாக்குதல் முறையை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த லா ருஸ்ஸா அதற்கு இத்தாலி பாராளுமன்ற கமிஷனின் அங்கீகாரம் தேவை எனவும் குறிப்பிட்டார்.

செய்தி : பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza