Wednesday, October 13, 2010

இஷ்ரத் ஜஹான் லஷ்கர் போராளி என்ற தகவல் என்.ஐ.ஏவின் குற்றப்பத்திரிகையில் இல்லை

புதுடெல்லி,அக்.12:மும்பை தாக்குதலில் சூத்திரதாரி எனக் கருதப்படும் அமெரிக்க குடிமகன் டேவிட் ஹெட்லியின் மீது தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானைக் குறித்த விமர்சனங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை.

இஷ்ரத் ஜஹான், லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப் படைகளில் ஒருவர் என இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் முன்பு கூறியிருந்தனர்.

இத்தகவலை, இந்த ஆண்டு ஜூனில் சிகாக்கோவிற்கு சென்ற என்.ஐ.ஏ மற்றும் சட்டத்துறையின் நான்கு உறுப்பினர்களிடம் ஹெட்லி தெரிவித்ததாக உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

ஆனால், இரண்டு ராணுவ மேஜர்கள் உள்ளிட்ட ஐந்து பாகிஸ்தானி குடிமகன்களுக்கெதிராக என்.ஐ.ஏ இண்டர்போலின் கைது வாரண்டை கோரியிருந்தது. ஆனால் என்.ஐ.ஏ ஹெட்லியின் மீதான குற்றப்பத்திரிகையில் இஷ்ரத்தைக் குறித்து மெளனம் சாதிக்கிறது.

செய்தி : பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza