Wednesday, July 31, 2013

அத்வானி கூட்டத்திற்கு கட்டுப்பாடு - இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை!

 சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பங்கேற்கும் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில் படுகொலை செய்யப் பட்ட பா.ஜ.க. செயலர் ஆடிட்டர் ரமேஷ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அத்வானி சேலம் வருகிறார். இக்கூட்டம் வரும் ஆக-1 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடு விதித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை, சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத், நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு வழங்கியுள்ளனர்.

போலி என்கவுண்டருக்கு சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்


டில்லி: போலி போலி என்கவுண்டருக்கு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

"2009 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 15 வரையிலும் காவல்துறை (Police), பாதுகாப்புத் துறை (Defense) மற்றும் துணை இராணுவத்தினரால் (Paramilitary Forces) நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் 555 வழக்குகள் போலி என்கவுண்டர்கள் என தேசிய மனித உரிமை கழகம் (NHRC) பதிவு செய்துள்ளாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிர்ச்சி மற்றும் அதிருப்தி வெளிக்காட்டியுள்ளது.

ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவக்கம்!



2010-ஆம் ஆண்டு முடங்கிய ஃபலஸ்தீன் - இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க உள்ளது. அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நேற்று இரவு காலதாமதமாக துவங்கிய பேச்சுவார்த்தையின் விபரங்கள் இன்று வெளியாகும் என கருதப்படுகிறது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை - ஐ.ஜி குற்றச்சாட்டு

லக்னோ: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை முன்னாள் தலைவர் எஸ்.ஆர். தாராபுரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் நிலை என்னவாயிற்று என்பது கூட அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்றும் அப்படி காணாமல் போனவர்கள் காவல்துறையினர் ரகசிய பாதுகாப்பில் எடுக்கப்பட்டு குண்டுவெடிப்பு தொடர்பான விசயங்களில் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார்.

கல்லூரியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்- ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் கைது!



கேரள மாநிலம் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நாட்டு வெடிக்குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கேரளாவில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ அமைப்புகள் அரசியல் நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Monday, July 29, 2013

நீதிக்காக போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்


சென்னை: SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் சார்பாக 27.7.2013 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: "கண்ணியமும்,புண்ணியமும் பொருந்திய ரமலான் மாதத்திலே 1432 ஆம் ஆண்டு அசத்தியத்திற்கும்,சத்தியத்திற்கும் தீர்ப்பு வழங்கிய நாளான பத்ரு போர்க்களம் நடந்த தினத்திலே நாம் சங்கமித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் !

NWF நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

“ஹிந்து தேசியம்” என்று பேசுவது, தேசத்திற்கு எதிரானது - கட்ஜு

நாக்பூர்: முதலில் இந்தியர்கள் என்று நாம் ஒன்று பட வேண்டும். அதுதான், இந்திய தேசியவாதிகளின் அடையலாம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியம் மற்றும் கிறிஸ்துவம் என்று பேசுவது தேசியத்திற்கு எதிரானது என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சேர்மன் மார்கண்டேய கட்ஜு கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது ஊடகங்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு கேட்டு கொள்வது என்னவென்றால் இந்திய தேசியவாதத்தை ஊக்குவிக்கவேண்டும். மராத்தி டெய்லி லோக்மாத் என்ற பத்திரிகை ஏற்பாடு செய்த விழாவில் “இதழியலின் சிறப்பும், சமய, சார்பன்மையை ஊக்குவிப்பதில் மீடியாவின் பங்கும்” என்ற தலைப்பல் சிறப்புரையாற்றினார்.

Saturday, July 27, 2013

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி!ஏராளமானோர் பங்கேற்பு!

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக்  தலைமை தாங்கினார்.  எஸ்.டிபி.ஐ நகர் பொருளாளர் சித்திக் அலி  வரவேற்புரையாற்றினார் .

  எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக், டாக்டர் ஜவாஹிர் உசைன்,கீழக்கரை முஜீப்,இன்ஞினியர் கபீர்,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு),

Wednesday, July 24, 2013

இராமநாதபுரத்தில் மசூதிக்கு தீ வைப்பு; முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

 இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசல் ஒன்று பள்ளி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த (22/07/2013) திங்கள் இரவு சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து சிறுநீர் கழித்து, இருந்த தொப்பி உள்ளிட்ட ஆவணங்களை எரித்து, வராண்டா பகுதியில் இருந்து மின்விசிறி மற்றும் ஒலி பெருக்கியை சேதப்படுத்தி தமது மத துவேசத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளனர்.

Dua For Gaza