Thursday, September 22, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை தடுக்க தவறிய சிதம்பரம்; பிரணாப் ஒப்புதலுடன் நிதியமைச்சகம் பிரதமருக்கு அனுப்பிய கடிதம்

P-Chidambaram-and-Pranab-Mukherjee-1024x641
டெல்லி:2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க 2007-ல் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழு   நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தற்போதைய நிதி அமைச்சக குழுவின் மூத்த அதிகாரி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதமானது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபலஸ்தீன் தனி நாடு கோரிக்கை: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் – ஒபாமா

obama_abbas_jpg_1322521cl-8
நியூயார்க் ஃபலஸ்தீனுக்கு சுதந்திர நாடு கிடைப்பதற்க்கான எல்லா முயற்சிகளையும் ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸிடம் தெரிவித்தார்.

நியூரார்கில் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் அவர் அறிவித்தார். (இதன் மூலம் அமெரிக்காவின் சுயரூபமும், குள்ளநரித்தனவும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.)

புகார் கொடுக்க வந்த தலித் நபரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளிய ஐஏஎஸ் அதிகாரி

IAS_officer_throws_Dalit_295

எட்டாவா:தலித் இனத்தைச் சார்ந்த நபர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று அவரது குறைகளை தெரிவிப்பதற்காக முயற்சி செய்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரியால் கழுத்து சட்டையை பிடித்து வெளியில் தள்ளபட்டுள்ளார்.

அவர் கான்ஷி ராம் அவாஸ் யோஜ்னா என்ற நகர்ப்புற ஏழைகள் விடுதி பற்றி புகார் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சிறப்பு முதன்மை செயலாளர் மற்றும் எட்டாவா மாவட்ட நீதிபதி ஆர்.பி. சிங்க் ஆகியோர் புகார் கொடுக்க வந்த தலித் நபரின் கழுத்துச் சட்டையை பிடித்து அங்ன்கன்வாடியை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவு

images
மும்பை:மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடும் பின்னடைவைச் சந்தித்தன.

இன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 704 புள்ளிகள் சரிந்து வர்த்தக முடிவில் 16,361.15 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 209.60 புள்ளிகள் சரிவடைந்து 4,923.65 புள்ளிகளாக நிறைவுற்றது.

ஐ.நா பாதுகாப்பு சபை ஃபலஸ்தீனத்தை அங்கீகரிக்க கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டம்

palestinian_rally_for_un_bid
ரமல்லா(மேற்குகரை):ரமல்லா மற்றும் நப்லுஸ் ஆகிய இடங்களில் ஃபலஸ்தீனத்தை ஐநா அங்கீகரிக்க கோரி பல்லாயிரக் கணக்கானோர் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக் காரர்களின் ஊர்வலம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீனத்தை பற்றி உரையாற்றும் ஒரு மணி நேரத்திற்கு முன் ஆரம்பம் ஆனது. இப்போராட்டம் ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் ஆத்திரத்தை கிளறியுள்ளது.

லிபியா மீதான இராணுவ நடவடிக்கைகளை மேலும் 90 நாட்கள் நீட்டித்து​ள்ளது நேட்டோ

libya_nato_0325
வாஷிங்டன்:அமெரிக்கா தலைமையிலான வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு(NATO) தனது இராணுவ நடவடிக்கைகளை  லிபியாவில் மேலும் 90 நாட்கள் நீட்டித்துள்ளது.

‘ஆபரேஷன் யுனிஃபைட் ப்ரொடெக்டர் வெறும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது’ என புதன் கிழமை அன்று  பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தூதர்களின் வழக்கமான கூட்டத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
 

ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்

asadi_s20110921023336030
மேற்குகரை ஃபலஸ்தீன் தலைவர்கள், ஐ.நா சபையில் பங்கெடுப்பதற்க்காக அமெரிக்காவிற்கு பயணிக்கும் நேரத்தில் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனின் மேற்குகரை (வெஸ்ட்பேங்க்) என்னுமிடத்தில் உள்ள விளை பயிர் மற்றும் பழ மரங்களை எரித்து நாசப்படுத்தினர். 

ஃபலஸ்தீனிற்கு எதிராக செயல்படும் யூதர்கள் பலர் விவசாய நிலமான பல ஹெக்டேர்களை எரித்தும், ஆலிவ், அத்தி மற்றும் பாதாம் மரங்களை துண்டித்தும் பெரும் அட்டூழியம் செய்துள்ளனர். 

ஷீலா மசூத் குடும்பத்திற்கு ஆபத்து – ஆசிய மன்றம் (FORUM ASIA)

shehla_masood
போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலரும் மற்றும் சமூக சேவகருமான ஷீலா மசூத் கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரும் இப்போது ஆபத்தில் இருப்பதாக ஆசிய மாதரம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷீலா மசூத்தின் குடும்பத்திற்கு இரண்டு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாக அவ்வமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் ஷீலா மசூத்தின் கொலையில் மத்திய பிரதேச மனித உரிமை ஆணையத்தின் போக்கு தங்களை ஆச்சரிய படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

லோக்பால் குழுவில் தலித் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்க்க வேண்டும் – ஆல் இந்தியா எஸ்.சி/எ.ஸ்டி கூட்டுக்குழு

560
புதுடெல்லி:லோக்பால் வரைவுக் குழுவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோரையும் சேர்க்கவேண்டும் என்று அனைத்து இந்திய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கூட்டுக்குழு கடந்த செவ்வாய்யன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அக்குழுவின் தலைவர் உதித் ராஜ் கூறுகையில்; ‘அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரையும் மற்றும் சிறுபான்மையினரையும் லோக்பால் குழுவில் மட்டுமல்லாது லோக்பால் உறுப்பினர்கள் தேர்வுக் குழுவிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

mallika-sarabhai

கோழிக்கோடு:அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கூறியுள்ளார்.

‘அது நீதியின் போராட்டம் அல்ல, அது  அநீதியின்  போராட்டம். சமாதானம் அமைதியை குறித்து இப்போது பேசுவதற்கு மோடிக்கு எவ்வித தகுதியுமில்லை.

Dua For Gaza