Monday, September 9, 2013

இரசாயன ஆயுதத்தை சிரியாவுக்கு வழங்கியது பிரிட்டன்! டெய்லி மெயில் பத்திரிகையின் அதிர்ச்சி செய்தி!



சிரியாவுக்கு இரசாயன ஆயுதத்தை வழங்கியது பிரிட்டன் என்ற தகவலை  லண்டனில் இயங்கும் டெய்லி மெயில் பத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவுக்கு சோடியம் ஃப்ளூராய்டை விற்க 2004-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே பிரிட்டீஷ் அரசு ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Saturday, September 7, 2013

அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

திண்டுக்கல் பிரவீன் குமார்
நிகழ்வு 1 : கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சவுராசி பரிக்ரமா யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது விசுவ இந்து பரிசத் அமைப்பு. சரயு நதிக்கரையில் துவங்கி அயோத்தி நகரைச் சுற்றி 250 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவிருந்த இந்த யாத்திரை, இந்துக்களை தட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. சுமார் 40,000 பேர் கலந்து கொள்ளக்கூடும் என்று அதிகார மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த யாத்திரைக்காக சுமார் 200 பேர்கள் வரையே கூடியிருந்தனர். அவர்களைக் கைது செய்ததோடு யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. 144 தடையுத்தரவைத் தொடர்ந்து வி.எச்.பி அறிவித்திருந்த ஆர்பாட்டங்களும் பிசுபிசுத்துப் போயுள்ளன.

ரிஹாபின் எம்.எஸ்.டபிள்யூ கல்வி உதவித்தொகை திட்டத்தின் 2-வது கட்டம் துவக்கம்!



புதுடெல்லி : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் என்ற அரசு சாரா அமைப்பு சமூக சேவை துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக மாஸ்டர் ஆஃப் சோசியல் வர்க் என்ற பட்ட மேற்படிப்பை பயில கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் 2-வது கட்டத்தை ரிஹாபின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் கூறியது :

ரிஹாபின் திட்டங்கள் அமல்படுத்தும் கிராமங்களைச் சார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் சமூக சேவையில் பங்குபெறச் செய்வதற்கான ஒரு முன்னேற்றமான திட்டம் இது. ஒரு சமூக சேவகரின் ஈடுபாடு, அர்ப்பணத்தை ஒவ்வொரு மாணவரும் தனது படிப்புக் காலத்தில் பேணவேண்டும். சமூக சேவையில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கினை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.

மோடியை கைது செய்ய அரசு சாரா அமைப்பு கோரிக்கை!: வன்சாராவின் கடிதம் எதிரொலி!


mod

அஹ்மதாபாத்: ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி. வன்சாராவின் பரபரப்பை ஏற்படுத்தும் இராஜினாமா கடிதம் வெளியாகியுள்ள சூழலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும் என்று அரசு சாரா நிறுவனம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் அரசின் உயர்மட்டத்தில் நடந்த சதித் திட்டத்தையே தான் அமல்படுத்தியதாக வன்ஸாரா தனது இராஜினாமா கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சதித்திட்டத்தில் பங்குடைய மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை கைது செய்து குஜராத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அரசு சாரா நிறுவனமான ஜன் சங்கர்ஷ் மஞ்சின் கன்வீனர் அமரீஷ் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Wednesday, September 4, 2013

சிறப்பு காவல் இளைஞர் படை ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்

ராமநாதபுரத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை யில் சேர விண்ணப்பங் கள் வினியோகிக்கப்பட் டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியை மேம்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என்று முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறி வித்திருந்தார்.

அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி வழக்கு : முன்னரே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புது டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992, டிசம்பர் 6ஆம் தியதி பாஜக உட்பட சங்பரிவார் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இது தொடர்பான  சதி வழக்கு, அத்வானி உட்பட 20 சங்பர்வார் தலைவர்கள் மீது போடப்பட்டு, ரேபரேலி தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், அத்வானி உட்பட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை அலகபாத உயர்நீதி மன்றம் விசாரித்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தி 2010 மே 21ஆம் தியதி உத்தரவிட்டது.

மசூதி மீது பன்றி ரத்தம் தெளிப்பு - நாசவேலையில் ஈடுபட்டவர்களுக்கு வலைவீச்சு!

கியூபெக்: கனடாவில் மசூதியைச் சுற்றி பன்றி ரத்தம் தெளித்து நாச வேலையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கனடாவின் கியூபெக் பகுதியில் அமைந்துள்ள மசூதி மீது பன்றி ரத்தம் தெளிக்கப் பட்டுள்ளதோடு மசூதியின் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன,
இதற்கிடையே பன்றி ரத்தம் தெளித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுகிறது. எனினும் இச்செயலுக்கு இதுவரை யாரும் பொருப்பேற்கவில்லை.

வறுமை மூளையை பாதிக்கும்! - இந்திய, அமெரிக்க விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில் தகவல்!



வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சயன்ஸ் (science) விஞ்ஞான இதழில் வெளியாகியுள்ளன.
முன்னர் வெளியாகியிருந்த தகவல்களின்படி, வறுமைக்கும் தவறான முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மூல காரணங்கள் சரியாக தெளிவில்லாமல் இருந்தன.

பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அரசு நாட வேண்டும்! – தேசிய தலைவர் கோரிக்கை

இந்தியாவின் தற்பொதைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் சையத் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்திருப்பது உள்ளிட்டவை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Monday, September 2, 2013

வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ரூ.500 கோடி முதலீட்டில் தேசிய வக்ஃப் கார்ப்பரேசன்! - மத்திய அரசு முடிவு!



வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கில் ரூ.500 கோடி முதலீட்டில் உருவாக்கும் தேசிய வக்ஃப் டெவலப்மெண்ட் கார்ப்பரேசனின் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வக்ஃப் சொத்துக்களில் இருந்து வருமானத்தை உருவாக்கி அதனை முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தவே வக்ஃப் கார்ப்பரேசனை மத்திய அரசு உருவாக்குகிறது. இதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான், உயர் அதிகாரிகள், மத்திய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று விவாதிக்கின்றனர்.

Dua For Gaza