Sunday, August 11, 2013

‘துர்கா சக்தி நாக்பாலால் இடிக்கபட்ட மஸ்ஜிதை கட்டிய பிறகே ஈத் பெருநாளை கொண்டாடுவோம்’ - கிராம மக்கள்!

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேமித்த பணத்தைக் கொண்டு கட்டிய மஸ்ஜிதை சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் இடித்துத் தள்ளியுள்ளார். புதிய மஸ்ஜிதை கட்டாதவரை நாங்கள் ஈத் பெருநாளை கொண்டாடமாட்டோம்’
என உத்தரபிரதேசம்-ஹரியானா மாநில எல்லையில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள காதல்பூர் கிராமத்தைச் சார்ந்த முஹம்மது இஸ்மாயீல் கூறுகிறார்.

இலங்கை மஸ்ஜித் மீது தாக்குதல்: 7 பேர் காயம்! ஊரடங்கு உத்தரவு!

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் போலீசாரும் அடங்குவர்.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு - மம்தா !

 "2014-2015 கல்வியாண்டிலிருந்து உயர் கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படும்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மம்தா இதனை தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினர் விற்பனையகங்களை நிறுவுதல், சிறுதொழில்களைத் தொடங்குதல் போன்ற இதர தொழில் வாய்ப்புகளையும் கிடைக்கச் செய்யப் படும் என்றும்,

Friday, August 9, 2013

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ஃபித்ரா விநியோகம்!

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும், மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் பெருநாள் தினத்தை ஏழைகளும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்தை  முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் ஆகிய அனைவரின் மீதும் இஸ்லாம் கட்டாய கடமையாக்கியுள்ளது.


Thursday, August 8, 2013

ஈகைத் திருநாளில் நீதி நிலைபெற பிரார்த்திப்போம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி


நம்பிக்கையாளர்களுக்கு உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்த வந்த ரமலான் மீண்டும் ஒரு முறை நம்மை விட்டு பிரிகின்றது. ரமலானின் வெற்றி இறையச்சத்தில் தங்கி இருக்கிறது. உள்ளத்தையும், உணர்வையும் அல்லாஹ்வின் பயிற்சி பாசறையில் ஈடுபடுத்திய நமக்கு அல்லாஹ் தக்வா (இறையச்சம்) எனும் உன்னதமான பண்பைத் தந்தருள் புரிவானாக !

நோன்பில் பெற்ற படிப்பினையை ஏனைய பதினோரு மாதங்களிலும் தொடரும் மாந்தருக்கு ஈருலகிலும் வெற்றியுண்டு. படிப்பினையை பெருநாளுடன் முடித்துக் கொண்டவர்களுக்கு ஈத்- தோல்வியின் நாளாக முடிவடையும்.

வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்க சிறுபான்மை கமிஷன் கோரிக்கை!

புதுடெல்லி: பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை தொழுகைக்காக திறந்து கொடுக்கவேண்டும் என்று தேசிய சிறுபான்மை கமிஷன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கமிஷனின் சிபாரிசை தொடர்ந்து டெல்லியில் உள்ள 31 வரலாற்று நினைவிடங்களைக் குறித்து ஆய்வு செய்ய மத்திய கலாச்சார அமைச்சகம் ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு (எ.எஸ்.எ) உத்தரவிட்டுள்ளது.

Monday, August 5, 2013

மேலப்பாளையத்தில் வெடிமருந்து பறிமுதல்! SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு!


நெல்லை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதிகளாக மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக கடந்த 2.7.2013 அன்று SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.   

இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M.நிஜாம் முகைதீன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியது: “1992 முதல் பல்வேறு பிரச்சனைகளையும், காவல்துறையின் மனித உரிமை மீறலையும் சந்தித்து அச்சத்துடன் மேலப்பாளையம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேலப்பாளையத்தில் வெடிகுண்டு செய்ய பயன்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை வைத்திருந்ததாக கூறி ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பற்றி தினமும் பத்திரிக்கைகள் சமூகத்தில் பீதியை ஏற்படுத்தும் செய்திகளை பீதியூட்டும் விதத்தில் எழுதி வருகின்றன. மேற்கண்ட விஷயத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மூலப் பொருட்களை, காவல்துறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உண்மையை வெளியிடவில்லை. இதனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலப்பாளையம் முஸ்லிம்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

Sunday, August 4, 2013

மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . இது குறித்து NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.

தொடரும் படுகொலைகள் யார் குற்றவாளி? பாப்புலர் ஃப்ரண்ட் நோட்டிஸ் பிரச்சாரம்

பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.

இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல்!

கேரளா: எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள தலைமை அலுவலகம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடிகள் உடைந்த சப்தம் கேட்டு அப்பகுதியில் மக்கள் கூடியதும் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தலைமறைவாகினர்.

Dua For Gaza