Saturday, September 17, 2011

மோடியின் சத்பாவனா உண்ணாவிரதம்(?)

20110917a_010107
அகமதாபாத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று காலை தனது 3 நாள் உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அகமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

சத்பாவனா உண்ணாவிரதம் என்ற பெயரிலான இந்த உண்ணாவிரதத்தை அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக நடத்துவதாக மோடி அறிவித்துள்ளார்.

உண்ணாவிரத மேடையில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜெட்லி மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த அகாலிதளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும் அமர்ந்துள்ளனர்.

வைஸ்வன ஜனதோ என்ற பாடலுடன் இந்த உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை மோடி முடித்துக் கொள்வார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் உண்ணாவிரதம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வெளியிடுகிறார் மோடி. அதில் நிறையப் பேர் அவருக்கு வாழ்த்து கூறி பதில் அளித்துள்ளனர். சிலர் இது ஒரு நாடகம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடியின் உண்ணாவிரதத்தை விமர்சித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, தானும் போட்டியாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறியிருந்தார். அதற்கான பந்தல் அமைக்கப்பட்டு போட்டி உண்ணாவிரதமும் ஏற்பாடாகியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம் மூலம் ஆங்கிலேய ஆட்சியை அகற்றப் பெரிதும் காரணமாக இருந்த காந்தி பிறந்த குஜராத் மண்ணில், உண்ணாவிரதப் போராட்டங்கள் கேலிக்கூத்தாகப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza