ரஞ்சனா தேசாயின் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான உயர்மட்டக்குழு (collegium) அங்கீகாரம் அளித்துள்ளது. இவர்களுடன் குஜராத் உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யாயா, கர்நாடாகா உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.எஸ்.கஹார் ஆகியோரின் நியமனத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1998-ஆம் ஆண்டு ரஞ்சனா தேசாய் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். தற்போது 28 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளனர். இவர்களில் 6 பேர் இரண்டு மாதத்திற்குள் ஓய்வு பெறுவர்.

0 கருத்துரைகள்:
Post a Comment