Monday, May 9, 2011

அதிக மதிப்பெண் பெற்று இரட்டை சகோதரிகள் சாதனை

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள வித்யோதயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள் ஜெயப்பிரதா மற்றும் இவரது சகோதரி ஜெயசுருதி. இருவரும் இரட்டையர்கள். வெளியாகியுள்ள +2 தேர்வில் இவர்கள் இருவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இவர்களில் ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களும், ஜெயசுருதி 1187 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள்.  பாடவாரியாக இம்மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:

மாணவி ஜெயப்பிரதாவின் மதிப்பெண்கள்:

பிரெஞ்சு - 198 ஆங்கிலம் - 193 இயற்பியல் - 200 வேதியியல் - 199 கணிதம் - 200 கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200  மொத்த மதிப்பெணகள் - 1190

மாணவி ஜெயசுருதியின் மதிப்பெண்கள்:

பிரெஞ்சு - 198 ஆங்கிலம் - 191 இயற்பியல் - 200 வேதியியல் -200 கணிதம் - 199 கம்ப்யூட்டர் சயின்ஸ் - 199 மொத்த மதிப்பெணகள் - 1187


இவர்களின் தந்தை ரெங்கராஜன் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவும்  தாயார் லதா  வங்கி ஒன்றில்  கிளார்க்காகவும் பணி புரிந்து வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza