Wednesday, May 11, 2011

பாப்ரி மஸ்ஜித்:அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை வரவேற்கத்தக்கது-பாப்புலர் ஃப்ரண்ட்

presided-k-m-sheriff
புதுடெல்லி:இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மூன்றாக பங்குவைத்து அளிக்கவேண்டும் என கூறிய அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை விசித்திரமானது என குறைகூறிய உச்சநீதிமன்றம் வழக்கை மறுபடியும் விசாரிக்கவேண்டும் என கருத்துத்தெரிவித்துள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

வகுப்புவாத சிந்தனையுடன் அளிக்கப்பட்ட பாரபட்சமான அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக்குறித்து கவலைக்குள்ளான மதசார்பற்ற வட்டாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆறுதலை அளிக்கும்விதமாக அமைந்துள்ளது.பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் தொடர்பான வழக்கில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானதும், நீதியற்றதுமாகும்.

நீதியை தாமதிப்பது நீதியை மறுப்பதற்கு சமம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விரைவாக விசாரணையை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புவதாக கே.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza