புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு ஆயுர்வேத சிகிட்சை, இதய, நீரழிவு நோய் தொடர்பான சிகிட்சை ஆகியன பெங்களூரில் மிகச்சிறந்த மருத்துவமனையில் அளிக்க வேண்டுமென நீதிபதிகளான எ.எம்.பாஞ்சால், ஹெச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
குற்றப்பத்திரிகையின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், அப்துல் நாஸர் மஃதனியின் வழக்கறிஞருக்கு நகலை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு இரண்டுவார அவகாசம் அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment