Monday, April 25, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்:பா.ஜ.க பொருளாளர் ப்யூஷ் கோயலுக்கு தொடர்பு – சி.பி.ஐக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள்

 
2gபுதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பா.ஜ.கவின் தேசிய பொருளாளர் ப்யூஷ் கோயலின் பங்கினை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளன.

சி.பி.ஐ கைது செய்த டி.பி ரியாலிட்டி ப்ரமோட்டர்ஸ் ஷாஹித் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோருடன் கோயலின் தொடர்பை நிரூபிக்கும் ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கோயலின் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தப்போவதாக கூறப்படுகிறது.

டி.பி. ரியாலிட்டியின் ஐ.பி.ஒ கன்ஸல்ட்டண்டாக பணியாற்றியவர் கோயல். டி.பி ரியாலிட்டிக்கும் கோயலுக்குமிடையே நடந்துள்ள பண பட்டுவாடா தொடர்பான ஆதாரங்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. ஆனால், இதர நிறுவனங்களைப் போலவே ஆலோசனை வழங்கியதைத் தவிர டி.பி ரியாலிட்டியுடன் தனக்கு வேறு எவ்வித தொடர்பும் இல்லை என கோயல் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியின் குற்றஞ்சாட்டை வீசும் பா.ஜ.கவுக்கு கோயலின் தொடர்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கோரி பா.ஜ.க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை ஸ்தம்பிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza