Wednesday, September 4, 2013

மசூதி மீது பன்றி ரத்தம் தெளிப்பு - நாசவேலையில் ஈடுபட்டவர்களுக்கு வலைவீச்சு!

கியூபெக்: கனடாவில் மசூதியைச் சுற்றி பன்றி ரத்தம் தெளித்து நாச வேலையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கனடாவின் கியூபெக் பகுதியில் அமைந்துள்ள மசூதி மீது பன்றி ரத்தம் தெளிக்கப் பட்டுள்ளதோடு மசூதியின் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன,
இதற்கிடையே பன்றி ரத்தம் தெளித்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுகிறது. எனினும் இச்செயலுக்கு இதுவரை யாரும் பொருப்பேற்கவில்லை.

இதுகுறித்து தெரிவித்த இப்பகுதி காவல்துறை அதிகாரி, " கண்டெடுக்கப் பட்டுள்ள கடிதத்தில் பன்றி ரத்தம் என கூறப்பட்டுள்ளது எனினும் இது பன்றி ரத்தம்தானா? என ஆராய ரத்தக்கரையினை சோதனைக்கு அனுப்பியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
Info : inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza