Thursday, March 21, 2013

2013-இறுதிக்குள் மதுரை to கோலாலம்பூர் நேரடி விமான சேவை!


மதுரையில் இருந்து மலேசியாவின் கோலாம்பூர் நகருக்கு நேரடி விமான சேவையை நடத்துவதற்கு, Spicejet ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தெரியவருகிறது. Spicejet விமானங்கள் இந்த ரூட்டில் ஆபரேட் செய்வதற்கு Malaysia Airports Holdings Bhd அனுமதி வழங்கிவிட்டது.
மத்திய அரசு ஊடாகவே இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது என்ற போதிலும், மத்திய அரசின் அனுமதியும் அவசியம். ஆனால், அதை பெற்றுக் கொள்வதில் Spicejet நிறுவனத்துக்கு சிக்கல் இருக்க போவதில்லை.

இதுவரை கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்கிவந்த Jet Airways, அந்த ரூட்டை தற்போது இடைநிறுத்தி வைத்துள்ளது. அதையடுத்து, தற்போது Air India Express மட்டுமே கோலாலம்பூருக்கான சேவையை தமிழகத்தில் இருந்து வழங்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக உள்ளது.
தமிழகத்தில் இருந்து கோலாம்பூருக்கு விமானங்களை இயக்க Spicejet நிறுவனம் தவிர, Indigo நிறுவனமும் மலேசியாவிடம் விண்ணப்பித்திருந்தது. அவர்களுக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.
Indigo, சென்னையில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி கேட்டிருக்க, Spicejet மதுரையில் இருந்து இயக்க விண்ணப்பித்திருந்தது. மதுரை – கோலாலம்பூர் விமானங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் இயங்க தொடங்கி விடலாம் என Malaysia Airports Holdings Bhd சார்பில் கூறப்படுகிறது.

-viruviruppu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza