திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.குடிப்பவர்கள் போதையினால் பொதுமக்களுக்கும்,மாணவ மாணவிகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஏராளமானோர் அப்பகுதியில் ஒன்று கூடி டாஸ்மாக் மது பானக்கடையை அகற்றக்கோரி நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர் தலைவர் கனி தலைமை தாங்கினார்.மாவட்டதலைவர் அப்துல் ரஹ்மான்,துணைத்தலைவர் டாக்டர் மதிவாணன்,பொருளாளர் ரியாஸ்,தொகுதி தலைவர் அன்வர் பாட்சா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்சாரி,தொழிற்சங்க மாவட்ட தலைவர் அபுதாஹிர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,கட்சி தொண்டர்கள்,மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முற்றுகையிட முயன்ற அனைவரையும் போலிசார் கைது செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment