Saturday, February 16, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம்:பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள்

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி:


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது காலடித்தடங்களை பதித்து வருகின்றது.


நமது இந்திய நாட்டைஇந்துத்துவ ஃபாசிஸ சக்திகள் இனவாதத்தின் அடிப்படையில் பிரிக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையிலும், ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகள் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் முன்னேறாத சமூகங்களாகவே முஸ்லிம்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என தொடரும் சூழ்நிலையில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் "யூனிட்டி மார்ச்" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.




இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 14.02.2013 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில துணைத்தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சாரம்சத்தை விளக்கினார்.


கன்னியாகுமரியில்  நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி :




 பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.அந்நிகழ்ச்சி சம்பந்தமாக நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹம்மது இலியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.கன்னியாகுமரி,திருச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 17 ந்தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி புறப்படுகிறது. இந்த பேரணி அண்ணா ஸ்டேடியத்தை சென்று அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும்.



இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசுப், மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் ஆகியோர் உடனிருந்தனர்.



திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி :






பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.அந்நிகழ்ச்சி சம்பந்தமாக திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்தீக் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza