Tuesday, February 19, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது இஸ்மாயீல்  துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் காந்தி சாலையில்  துவங்கி சண்முகம் சாலையில்  நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும்  பொதுக் கூட்டம் நடைபெற்றது.

 

இப்பொதுக் கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் M.ஷேக் முஹம்மது அன்சாரி  தலைமை தாங்கினார்.  சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான்  வரவேற்புரை ஆற்றினார் . 

மாநில துணைத்தலைவர் M.ஷேக் முஹம்மது அன்சாரி தலைமையுரையாற்றிய போது 


சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் வரவேற்புரையாற்றிய போது 


பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது இஸ்மாயீல் மற்றும் மாநில பொதுச் செயலாளர் A.காலித் முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .  

தேசிய செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது இஸ்மாயீல் சிறப்புரையாற்றிய போது 


மாநில பொதுச் செயலாளர் A.காலித் முஹம்மது சிறப்புரையாற்றிய போது 

 

நிகழ்ச்சியின்  நிறைவாக  பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் காஞ்சிபுரம்  மாவட்ட தலைவர் H.அஹமது மைதீன்  தீர்மானங்களை வாசித்து நன்றியுரையாற்றினார் . பல்லாயிரக்கனக்கான மக்கள்  பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் H.அஹமது மைதீன் நன்றியுரையாற்றிய போது  


கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் 


 M.ஷேக் முஹம்மது அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது 

 

பத்திரிகையில் வெளிவந்த செய்தி 


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza