Thursday, January 17, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் திறப்பு விழா


இராம்நாட் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர தலைமை அலுவலகம் 16.01.2013 அன்று திறக்கப்பட்டது.இதற்கு நகர தலைவர் ரியாஸ் தலைமை தாங்கினர். இரு ஜமாத்தலைவர்களும் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் , முகவை மாட்ட தலைவர் H.ஹபீப் நவாஸ் கான் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் ஹாஜி.கபீர் அம்பலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் பேசுகையில் , " அலுவகம் மூலம் இயக்கத்திற்க்கு அடையாளம் தேவையில்லை இயக்கத்தின் 20வருட வரலாறுக்கு சொந்தம் இந்த பெரியப்பட்டினம் என்றும் , இயக்கம் கடந்து வந்த பாதைகள் மற்றும் தற்போது செய்து வரும் பணிகள் பற்றியும் எடுத்துரைத்த அவர் முஸ்லிம்களை சக்திப்படுத்தும் பணியிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் பின்வாங்காது " என்றார்.

முன்னதாக பேசிய ஊராட்சிமன்ற தலைவர் ஹாஜி.கபீர் அம்பலம் , "15 வருடத்திற்க்கு முன்பே இந்த இயக்கத்தை தனக்கு தெரியும் என்றும்.சகோதரத்துவம்,சமத்துவம்,சமூக பணிகள் செய்துவரும் தங்களின் பணி மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் " என்று பேசினார்.

இதில் SDPI கட்சியின் இராம்நாட் தெகுதி தலைவர் ஃபைரோஸ் கான்,தொகுதி செயலாளர் ஜமீல் , பெரியப்பட்டினம் நகர செயலாளர் சேகு இபுராகிம், நகர பொருளாளர் இஸ்மாயில் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியப்பட்டினம் நகர செயலாளர் அசன் அலி நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுவடைந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza