Saturday, January 26, 2013

அரபு நாடுகளில் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பணிபுரிய இலங்கை அரசு தடை

அரரேபிய நாடுகளில் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக 25 வயதுக்குட்பட்ட பெண்கள்  அங்கு செல்வதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

 இத்தகவலை இலங்கையின் தொடர்புத் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

குறைந்த ஊதியத்திற்கு வீட்டு வேலை செய்வதற்காகச் செல்லும் அனைத்து வயது பெண்களுக்குமான தடை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் இது முதல்படிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

 சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த 17 வயது ரிசானா நஃபீக் என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 9 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza