Friday, January 25, 2013

விஸ்வரூபத்திற்கு 15 நாள் தடை - தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி


துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதமாக அனைத்து காட்சிகளையும் இயக்குனர் கமலஹாசன் தன்னுடைய கற்பனையை கொண்டு சித்தரித்திற்கும் இப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசிடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தது. இஸ்லாமியர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு முதற்கட்டமாக 15 நாள் தடை விதித்ததற்கு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


மேலும், விஸ்வரூபம் முழுவதுமே இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்தும், முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆனை அவமதித்தும் திரைப்படம் முழுவதும் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் இப்படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது.

இப்படத்தை முறையாக தணிக்கை செய்யாத திரைப்பட தணிக்கை குழுவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேலும், திரைப்பட தணிக்கை குழுவை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கின்றது.

இந்நிலையில்  பாண்டிச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கமிஷனர் , டி.ஜி.பி மற்றும் முதல்வரை சந்தித்து பேசினர் . அது போல் காரைக்காலிலும் மாவட்ட ஆட்சிரிடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது . தமிழகத்தை தொடர்ந்து பாண்டிச்சேரி மாநிலத்திலும் விஸ்வரூபம் படத்திற்கு தற்காலிக தடை விதிக்க்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza