Thursday, December 20, 2012

மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!

malegoan  blast 1
புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.
300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளான டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான், ஆகியோருடன் நானும் சேர்ந்து மலேகானில் குண்டு வைத்ததாக அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரி ஒப்புக்கொண்டுள்ளான்.
இதில் டான்சிங், ராஜேந்தர் சவுதரி கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுதினமே கைது செய்யப்பட்டான். இவ்வழக்கில் இதர குற்றவாளிகளான ராம்ஜி மற்றும் அமித் என்ற அஸ்வினி சவுகான் ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் தாம் மலேகான் சென்று குண்டு வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷிக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் இத்தகவல் தெரிந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேகானை குண்டுவைக்க தேர்வு செய்ததாக ராஜேந்தர் சவுதரி வாக்குமூலம் அளித்துள்ளான்.
வெடிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பதை குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராஜேந்தர் சவுதரி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்படுவான்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza