Tuesday, October 2, 2012

மகாத்மாவின் கனவான மதுவிலக்கு நிறைவேறுமா?

தனது வாழ்நாளில் மகாத்மா காந்தி தீவிரமாக வலியுறுத்திய இரண்டு விஷயங்கள் மது விலக்கும்,தீண்டாமையும்தான்.இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.மகாத்மாவின் நோக்கம் நிறைவேறவில்லைஆயினும் இன்றும் நாட்டில் இவ்விரண்டும் ஒழிக்கப்பட வில்லை.ஏன் கூறுகின்றேன் என்றால்  மகாத்மா படம் பொரிக்க படம் இன்று அதிகம் புழங்கும் இடம் மது கடையில்தான்  .இத்தனைக்கும் காந்தி அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டை பெரும்பாலும் ஆட்சி செய்தது,செய்துகொண்டிருக்கிறது.ஆனால் காந்தியின் கனவை நிறைவேற்றத்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு மனமில்லை.காரணம் என்ன?
சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நமது தலைவர்களுக்கு தேச நலனும் மக்கள் முன்னேற்றமும் முதன்மையானவையாக இருந்தது.ஆனால் இன்று உள்ள நமது தலைவர்களுக்கு பதவி சுகமும் அதனால் கிடைக்கும் சுய ஆதாயமும் தான் முக்கியமாக தெரிகிறது.ஜனங்க என்னவானாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை.என்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன.
மது விலக்கு என்றால் என்ன?

 தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று. இப்படிப்பட்ட போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.


தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று.அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம் வாழ்கின்றனர் என்று கணக்கு காட்டுகிறது அரசு.


காரணம் அரசின் மது வியாபாரத்தால் வாழ்கின்றது சில குடும்பங்கள் ஆனால் அதனால் சீரழிந்து கொண்டு இருகின்ற குடும்பங்களோ பல கோடி.இதை நம்பி தான் அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. மேலும் பலரது உயிரையும் காவு வாங்க காத்து கொண்டு இருக்கிறது.இரு திராவிட கட்சிகளும் நாணயத்தின் இருபக்கம் போல் மாறி மாறி மக்களை மரண குழிக்கு தள்ளி கொண்டு இருக்கிறது .தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. 2003-ம் ஆண்டு மது மூலமாக 2800 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. .மதுவால் ரூ. 18 ஆயிரம் கோடி வரவும் கிடைக்கிறது. ஆனால் மது அருந்துபவர்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவு ஏற்படுகிறது. இதன் மூலம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தெள்ளத் தெளிவாகி உள்ளது. மேலும் விளக்காமாக பார்ப்போம் 

எல்லா மதமும் எதிர்க்கும் மது : 
உலகில் பெரும்பான்மை மதங்களும்  மதுவிற்கு எதிராக இருக்கின்றன.


1.இஸ்லாம் மதுவை விலக்கப்பட்ட ஒன்றாகவே அறிவிக்கிறது. பெருமானார் (ஸல்) ஆட்சியாராக மெக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை கொடிய மதுபானங்களை தடை செய்ததுதான். 
2.இந்து மதமோ 5 மிகப் பெரிய தீமைகளில் ஒன்றாக மதுவை குறிப்பிடுகிறது.
3.பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.
4.உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது.மேலும் கநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.

 இது போக தீமைகளின் தாயகம் மது என்றார் மகாத்மா  காந்தி.

மேலும் இரு திராவிட கட்சிகளும் தங்களுடைய தலைவராக பின்பற்றும் அறிஞர் அண்ணாவே 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில், .மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தேன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டிபோல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வேம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்'' என்றார். 

(அண்ணாவின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொண்டு இவர் வழியில் நாங்கள் செல்வதாக கூறும் திமுக-வும், மற்றும் அதிமுக-வும்தான் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து தான் வருகிறது ஒரு பொழுதும் இவர்கள்  கொள்கையை பின்பற்ற வில்லை )
.

மது விலக்கை முதலில் அறிமுகபடுத்தியவர்:

வாஸகோடகாமா இந்தியாவிற்கு வந்து மக்களை மதுவுக்கு அடிமை ஆக்கலாம் என்று திட்டத்தோடு கால் வைத்தார் ஆனால் அப்பொழுது மக்கள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தனர் காரணம் முகலாய மனனர்கள் மதுவை ஹராம் என ஒடுக்கி வைத்தனர் பினனர் வந்த ஆங்கிலேயர்கள் சதியால் மது இந்தியாவில் நுழைந்தது.பின்னர் அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு சுல்தான் இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?”

அதனால் மதுவினால் ஏற்படும் பலனை விட அதனால் அழிவு தான் அதிகம் தமது மக்களின் சமுதாய,பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மதுவை காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய்துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல்படுத்தினார்.
இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே. அது மட்டும் அல்லாமல் மேலும் ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய அதே வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.






தமிழ்நாட்டில் மது விலக்கு: 

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்தது . அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார் மற்றும் அவரது துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும்1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி,
அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் கள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டினார் இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார்.இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. சுதந்திரத்திற்கு பிறகு கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது. 


உடைந்த மதுவிலக்கு:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் (இப்பொழுது அறிமுகமாகவில்லை 40 வருடகளுக்கு முன்பு ) மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச் சேரி, கர்நாடகம் உள்பட பிற மாநிலங்களில் மது விலக்கு அமுல் படுத்தப்படவில்லைஇந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் (உதவிப்பணம்) வழங்கப்படும் என்று அறிவித்தது ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது.
  
ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது மீண்டும் அமுலுக்குக் கொண்டுவர கருணாநிதி முடிவு செய்தார். 1971 ஆகஸ்டு 30_ந்தேதி முதல் மது விலக்கு தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டு காலம் அமுலில் இருந்த மது விலக்கு தி.மு.க. ஆட்சியின்போது 1971 ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. மூதறிஞர் ராஜாஜி ,காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் போன்றோர்  முதல் அமைச்சரின் வீட்டுக்கே சென்று மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்து சொன்னால் ஆனால் முதலவர் மானியம் கிடைகாத கோபத்தில் ஐவர் எடுத்த முடிவில் பின்வாங்கவில்லை 

குறிப்பு 
40 வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் வந்த மது விலக்கு  போலி மது பானங்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கும் முதன்மை மாநிலம் குஜராத்...போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன. காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்: 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அப்போது தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாததால், அவசரமாக தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன. கள் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும், சாராயம் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பீர் 5 ரூபாய்க்கும், மற்ற மது வகைகள் ரூ.26 முதல் ரூ.55 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. கடைகளை இரவு 10 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 


நீதிமன்றத்தில் வழக்கு:

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டேயும், வி.எஸ்.ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்."மது விலக்கு சட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் ஒத்தி வைக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பது சட்ட விரோதமான செயல். இதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று, மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீராசாமி, நீதிபதிகள் பி.எஸ்.கைலாசம், ஆர். சதாசிவம், டி.ராமபிரசாத் ராவ், வி.வி.ராகவன் ஆகிய 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தார்கள். "மதுக்கடைகளை திறக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செயலற்றதாகி விடுகிறது" என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள். 

மீண்டும் மது விலக்கு:

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு அமுலில் இருந்த பொழுது எடுத்த நடவடிக்கைகள்:

மது விலக்கு அமுலில் இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்றங்களுக்காக 2,500 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மது குடித்த குற்றம், மது வாங்கிய குற்றம் போன்றவைகளுக்காக தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 700 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.மீதி 1,800 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, குடி போதையில் கலாட்டா செய்வது போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். இவர்கள் தண்டனை காலம் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த 1,800 பேரும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டனர்.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003:

‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது. 


முதவரிடம் மனு :

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டது .தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் பின்னர் வந்த தற்போது ஆட்சியில் உள்ள அரசு அதிமுக மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 18000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். (அப்படியானல் எப்படி லாட்டரியை தடை செய்தீர்கள்  அதுவும் இப்பொழுது பக்கத்துக்கு மாநிலங்களில் உள்ளதே ?)


மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். 
மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது.




லாட்டரிச் சீட்டு 

லாட்டரிச் சீட்டு நடத்தி வந்த தமிழக அரசு அதை தடை செய்ததால் பல குடும்பங் கள் நடுத் தெருவிற்கு வந்து விட்ட தாக பலரும் ஒப்பாரி வைத்தனர். உண்மையில் லாட்டரி தொழில் செய்தவர்கள் எல்லாம் ஆக்கப் பூர்வமாக வேறு வகையில் தொழில் செய்ய தொடங்கி விட்டார்கள். அதுபோலவே மது விலக்கு அமல்படுத்தப்பட்டால் ஆக்கப்பூர்வமானவை நடக்கும் என்பது திண்ணம்.அரசு சாராயக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயச் சாவு அதிகமாகும் என்கிறார்கள். இது ஒரு வகையில் உண்மையென்றால் அதன் எண்ணிக்கை சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவாகவே இருக்கும் என்பது யதார்த்த உண்மை.பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று சொல்வார்கள். பல குடிகாரர்கள் இறந்தாலும் ஒரு நல்லவன் வாழ வேண்டும் என்ற தத்துவம் உரு வாக வேண்டும். அதுவே நாட்டுக் கும் வீட்டுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

மேலும் மதுக்கடைகளை மூடிவிட்டால்,மதுவிலக்கு சட்டத்தினை அரசு அமுல்படுத்தப்பட உள்ளது, டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட உள்ளது என்பன போன்ற கசிவுகள் வெளிவரத் தொடங்கியதுமே! அப்படியென்றால் 6400 மதுபானக்கடையில் வேலை செய்யும் 36000 பேர்களின் நிலை என்ன? என்ற அபலக்குரல் கேட்கிறது. 36,000 குடும்பங்களைப் பேசும் நீங்கள் 36,0000 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடிகாரர்களின் குடும்ப நிலையினை ஏன் பார்க்கவில்லை. சரி, உங்கள் பேச்சுப்படி பார்த்தாலும்...மதுக்கடைகளை மூடினால் வேறு வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத கையாளாகதவர்களா? அல்லது 70ஐத் தாண்டிய கிழவர்களா? எல்லோரும் வாலிபர்கள் தானே!! அதுவும் இழப்பது சொற்ப சம்பள வேலை தானே, உங்களுக்கு என்ன அரசு ஊழியர்கள் போல் சம்பளமா என்ன? ஒர் கதவு மூடினால் மறு கதவு திறக்கும். ஆகையால் இந்த சொற்ப சம்பளப் பணியினை விட்டுவிட்டு ஒரே மாதத்தில் வேறு பணிக்குத் தயாராகிவிடுவார்கள். மேலும் வேலை  இழந்தவர்களுக்கு அரசும் உதவி செய்ய வேண்டும் எஸ் டி பி ஐ யும் கோரிக்கை விடுத்து வருகிறது

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது. 

அது மட்டும் அல்லாமல் லாட்டரி சீட்டை ஒழித்த பிறகு இப்பொழுது லாட்டரியை யாரவது வாங்குவது உண்டா?சிலர் கள்ள சந்தையில் விற்கின்றனர் ஆனால் சில நாட்களில் கைது செய்ய படுகிறார்கள் அதே போல் மது விலக்கையும் கொண்டு வந்தால் சில நாட்கள் களைத்து அதுவும் சரியாகி விடும் நம் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பெரிய காரியம் இல்லை 


மது குடிபவர்களின் வளர்ச்சி :

உலகத்தில் அதிகமாக குடிப்பவர்கள் இடம் இந்தியா,இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகம் குடிப்பவர்கள் உள்ளனர் 6 கோடியில் ஒரு கோடி பேர் குடி பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் இதில் 13 வயதிக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் தி.மு.க-அதிமுக அரசுகள், பொதுமக்கள் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், இலவசங்களை வழங்குவதற்கும், மதுக்கடைகள் சாராயக் கடைகள் மூலம் ஊழலில் கோடி கோடியாகப் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்கும் வசதியாகவும், வாய்ப்பாகவும் மதுவையும் சாராயத்தையும் அனுமதித்தனர்.மது விலக்கு அமுலில் இல்லாததால், மதுப்பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து, இளம் தலைமுறையினர், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்கள்கூட மது அருந்தும் நச்சுப் பழக்கத்திற்கு ஆளாகி, அதன் விளைவாக, ஒழுக்கச் சீர்கேடுகளும், பண்பாட்டுச் சிதைவும் ஏற்பட்டு, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், வழிப்பறி, கொள்ளை, கொலைகள் உள்ளிட்ட அனைத்து சமுதாய ஆபத்துகளுக்கும் மதுவே காரணம் ஆகிவிட்டது.


மூத்தகுடி' தோன்றியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் இன்று "குடியில், மற்ற மாவட்டங்களைவிட மூத்தது' என்னும் பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை. பிறகு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.
இலைமறை காய்மறையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைந்து வாழ்ந்த கள்ளச் சாராயம் 1974ல் அன்றைய முதல்வர் கலைஞர் புண்ணியத்தால் நல்ல சாராயமாக மாறியது. அரசே மக்கள் நலன் கருதி சாராயக் கடைகளை திறந்து ஏலம் விட்டது. அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சி பெற்று 1983ல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் டாஸ்மாக் என்ற அரசின் விற்பனை மையமாக அது மாறிப் போனது. பின்னர் மலிவு விலைமது வந்தது.

2003ல் அ(இ)ன்றைய முதல்வர் ‘ஜெ’ மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானம் தனியாருக்கு போய்விடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் இனிமேல் மதுவிற்பனையை அரசே முன்நின்று நடத்தும் என அரசாணை பிறப்பித்தார். அதுமுதல் கல்விக்கூடங்களை நடத்தி வந்த அரசு மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்தது. மதுக்கடைகளை நடத்திவந்த தனியார் கல்விக்கூடங்களை நடத்த ஆரம்பித்தனர்.பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் இவற்றின் அருகாமையில் எல்லாம் அரசு மதுக்கைடகள் தாராளமாக திறக்கப்பட்டன. எந்த சட்டமும் அரசை கட்டுப்படுத்தவில்லை. எந்த நியாயமும் இங்கு செல்லுபடியாகவில்லை.குடித்தால் சமூக மரியாதை இல்லை என்ற காலம் போய் குடித்தால்தான் சமூகத்தில் மரியாதை என்றாகிவிட்டது.

இன்று பள்ளிக்கூட விழாக்களில் கூட மது விளையாடுகிறது. நட்புக்கு தேநீர் வாங்கி கொடுத்தால் போதும் என்ற நிலை மாறி அது இன்று குவார்ட்டர் ஆக மாறியுள்ளது. காரணம் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரை எல்லா நாள் களும் மது இல்லாமல் இயங்குவதில்லை .அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் கால கூத்துக்கள் எல்லாவற்றிலும் ஆறாக ஓடும் மதுவை கண்டுகொள்வதில்லை. உலகிலேயே மது விற்பனை அதிகம் ஆகும் இடம் இந்தியா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விற்பனையாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக குடிகாரர்களின் தேசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் மது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.தமிழ்நாட்டிலோ அதிகமாகிக் கொண்டே வருகிறது.

குடிமக்களின் எண்ணிக்கை:

தமிழ்நாட்டில் 15லிருந்து 20 வயது வரை 10 சதவிகிதம்பேரும் 30- 30 வயது வரை 35 சதவிகிதம் பேரும் 30-35 வயது வரை 37 சதவிகிதம் பேரும் 35- 50 வயது வரை 18 சதவிகிதம் பேரும் மொடாக் குடியர்களாக மாறியிள்ளனர் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 



மதுவினால் ஏற்படும் பிரச்சினைகள்:

குடி குடியைக் கெடுக்கும்” என்பது முதுமொழி.மது உணர்வையும் உடலையும் பாதிக்கும் ஒரு நச்சுப்பொருளாகும். அன்றைய காலம் குடிப்பவர்களை ஒரு புழுவைப் போல பார்த்தது.ஆனால் இன்றையசமூகம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது.உலக சுகாதார நிறுவனமும் ’மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும்,தீய செயல்என்றும்”கூறுகிறது.மதுவானது உடல் நலத்தைப் பாதிப்பதுடன் சகல சமூக சீர்கேடுகளுக்கும் தூண்டுதலாகஅமைகிறது.
ஆண்கள் 30கிராமிற்கு மேலதிகமாகவும்,பெண்கள் 20கிராமிற்கு மேலதிகமாகவும் குடிப்பதால் நிச்சயமாக கல்லீரல்பாதிப்படைகிறது.

அதிலும் குடிப்பதில் 20வீதம் உடனடியாக இரத்தத்தில் கலக்குகிறது.நாம் சாப்பிடும் உணவு தேவைக்கு அதிகமானால்கல்லீரலில் தான் சேமிக்கப்படுகிறது.மதுவும் அதுபோலத்தான் கல்லீரலை அடைகிறது.அங்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களால்கல்லீரல் பாதிப்படைகிறது.இதனால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேருகின்றன.அதிகமாக கொழுப்பமிலங்கள் உற்பத்தியாகவும்வாய்ப்பு ஏற்கடுகிறது.இவ்வாறு உற்பத்தியாகும் கொழுப்புக்கள் கல்லீரலில் படிந்து ஈரலை பெரிதாக்கி விடுகிறது.இதனால் கல்லீரலின்செல்கள் பாதிக்கப்பட்டு Cirrhosis  எனும் நோய்நிலை ஏற்படுகிறது.மேலும் அதிகமாக இரும்புச்சத்துக்களும் படிகிறது.

இதனால் உடலில்பல்வேறு குணங்குறிகள் தோன்றுகின்றன.உடல் மஞ்சளாதல்,பித்தநீர்க்குழாய் அடைப்பினால் வயிற்றுவலி,பசியின்மை போன்றனஇ;வற்றில் சிலவாகும்.இதைத் தொடர்ந்து புற்றுநோயும் ஏற்படலாம்.புடல் பாதை பாதிக்கப்பட்டு Cirrhosis  ஏற்படுவதுடன்உணவு;குழாயில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பாகிறது.தோளிலும் காலிலும் தசைநார்கள் செயலிழக்கிறது.உடலின் குளுக்கோசினைசீர்ப்படுத்தும் கணையம்(pancreas ) பாதிக்கப்படுகிறது.மறதி,சோர்வு என்பன ஏற்படுகின்றன. மூளை பாதிக்கப்பட்டு Korsakofts syndrome  ஏற்படுகிறது.மேலும் விற்றமின் பி குறைபாட்டால் wernik`s syndrome   ஏற்பட்டு நடக்கமுடியாத நிலை ஏற்படலாம்.நோய் எதிர்ப்புச்சக்தியும்குறைவதுடன் மனநோயும் ஏற்படுகிறதது.இவ்வாறு மூளை,இதயம்,நரம்பு,இனவிருத்தி உறுப்பு,இரைப்பை,கணையம் என தொடர்ந்துஉறுப்புக்கள் பாதிப்படைகின்றன.வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது.அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.
கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff’s Syndrome)என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறதுபணத்தைக் கொடுத்து  விரைவில் பிணமாகும் நிலையை ஏன் உருவாக்க வேண்டும்? மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து மதுவைமறப்போம்.
மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் “மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்” என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.இன்றைக்குத் தமிழ் நாட்டிலே வேகமாக வளர்ந்து வருகிறது.

தெருவுக்குத் தெரு ஒயின் ஷாப்புகள், ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள், வீதியில் போவோரை எல்லாம் குடிப்பதற்கு வாருங்கள் என்று கூறும் அளவிற்கும் மேலும் ஒரு காலத்தில் ஊருக்கு ஒடுக்கு புறமாக இருந்த மதுக்கடைகள் இன்று கோவில்கள் ,பள்ளிகூடங்கள் அன் அறிகிலே வந்து விட்டது .இந்தியாவில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இல்லை. உலகில் 100 ஆண்டுகள் புளிக்க வைத்து தயாரிக்கப்படும் மதுபான வகைகள் இங்கு 24 மணி நேரத்தில் தயாராகின்றன. அத்தனையும் ரசாயனம்.இரைப்பை நோய்கள், குடல் புற்று நோய்கள், மனநல பாதிப்புகள், சிறுநீரக செயலிழப்புகள், கணைய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, மரபணு பாதிப்பு, ஆண்மைக்குறைவு என தமிழ்நாட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சரிபாதிப்பேர் குடியினாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

விளையாட்டாய் நட்புக்காக குடிக்க ஆரம்பித்து பின்னர் வருமானம் முழுவதையும் குடி விழுங்க ஆரம்பிக்கிறது. விளைவு வருமானம் இல்லாமல் பேய் குடும்பத்தில் குழப்பம் மிகுந்து கடைசியில் அது விவாகரத்தில் போய் முடிகிறது. பல வீடுகளில் ஆண்கள் மட்டுமே குடிபோதைக்கு அடிமையானாலும் கடைசியில் அது பெண்கள் தலையிலேயே விடிகிறது.பெண்களும் இப்பொழுது குடிக்க ஆரம்பித்து விட்டனர் பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் மதுவோடு சங்கமிப்பதால் வேலையின் கால அளவும், தரமும் குறைந்து போய்விட்டது.இப்பொழுது எல்லா நிறுவனங்களும் ஊழியர்களை ரிலாக்ஸ் செய்கின்றோம் என்ற பெயரில் பார்ட்டி கொடுத்து    அவர்களை பாதாள குழியில் தள்ளுகின்றனர் 

குடிப்பழக்கத்தினால் கொலை கொள்ளை :

குடிப்பழக்கத்தின் காரணமாக வழிப்பறி, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சாலை விபத்துக்கள் என குற்றச் செயல்கள்அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு. 

மதுப்பழக்கம் காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து இளம் தலைமுறையினர், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்கள்கூட மது அருந்தும் நச்சுப் பழக்கத்திற்கு ஆளாகி அதன் விளைவாக ஒழுக்கச் சீர்கேடுகளும், பண்பாட்டுச் சிதைவும் ஏற்பட்டு கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், வழிப்பறி, கொள்ளை, கொலைகள் உள்ளிட்ட அனைத்து சமுதாய ஆபத்துகளுக்கும் மதுவே காரணம் ஆகிவிட்டது.எண்ணற்ற குடும்பங்களில், தாய்மார்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்தக் கொடிய மதுவே மூலகாரணம் ஆகிவிட்டது. இந்த அபாயத்தில் இருந்து தமிழகத்தை மீட்காவிட்டால், தமிழக மக்களின் வருங்காலம், குறிப்பாக நமது சந்ததிகளின் எதிர்காலம் பெரும் நாசத்துக்கு ஆளாகிவிடும் என்பதை, தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் எண்ணிப்பார்க்க வேண்டும் . 


மனதைப் பதற வைக்கக்கூடிய நிலமை என்னவென்றால், இளம் தலைமுறைப் பெண்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்ற, நாம் கற்பனை செய்ய முடியாத விபரீதம், எண்ணற்ற குடும்பங்களில், தாய்மார்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்தக் கொடிய மதுவே மூலகாரணம் ஆகிவிட்டது. இந்த அபாயத்தில் இருந்து தமிழகத்தை மீட்காவிட்டால், தமிழக மக்களின் வருங்காலம், குறிப்பாக நமது சந்ததிகளின் எதிர்காலம் பெரும் நாசத்துக்கு ஆளாகிவிடும் என்பதை, தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சகோதரனும், சகோதரியும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று மிகுந்த கவலையோடு வேண்டுகிறேன். 


மதுவினால் விளையும் தீமைகள்: 

தேவையில்லாவைகளைப்பற்றி பேசி பகை உண்டாக்கிக் கொள்வார்கள். நண்பர்கள் எல்லாம் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள். மது அருந்துபவர்கள் உண்மையைச்சொன்னால்கூட ஏதோ குடி போதையில் உளறுகிறான் என்றுதான் சொல்வார்கள். மது அருந்திவிட்டு தெருவில் கண்ட இடங்களிலும் விழுந்து கிடப்பது, தேவையில்லாத அசிங்கம் பண்ணி வைபப்து..........அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். அவர்களை யாருமே மதிக்கமாட்டார்கள்.சமுதாயமும் குடும்பமும் அவர்களை ஒதுக்கி வைத்துவிடும்.
சம்பாதிக்கும் வருமானம் முழுவதும் மது அருந்துவதற்கே செலவிடுவதால், குடும்மே பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். சேமிப்பு என்பதே இல்லாமல் போய்விடும். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் இழந்து ......... கணவன் மனைவி பிரியும் அபாயம் நேரும். குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

.மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, சாராய வியா பாரத்தில் கின்னஸ் சாதனை படைத்ததுபோல, தமிழக அரசு சாலை விபத்துகளிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிர் இழந்தோர் 65,000 பேர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகம்(இது மிகவும் குறைவு இப்பொழுது அதிஹரித்து விட்டது )   . இதில் பெரும்பாலானவை குடியினால் ஏற்பட்டவைகளே. குடியினால் குடிகாரனுடைய குடும்பம் மட்டுமே சீரழியும் என்று தப்புக் கணக்குப் போடுகி றோம். ஆனால் அது உண்மை யல்ல. குடிகார டிரைவரால் ஏற்ப டும் சாலை விபத்தினால் பாதிக் கப்படுபவர்களில் பொது மக் களே அதிகம் என்பதே நிதர்சன மான உண்மைமது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது. 


“மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது. 

தமிழ் சினிமாவில் மது விலக்கு: 

1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது. 


இந்தியாவில் செயலபடும் மது விலக்கு:

இந்தியாவில் மதுவிலக்கு மூன்று வகையாக அமுல்படுத்தப்படுகிறது. முதலாவது முழுமையாக உள்நாட்டு - அயல்நாட்டு அனைத்து மது வகைகளையும் தடை செய்வது.இன்று மகாத்மா காந்தி பிறந்த குஜராத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு பெயரளவில் அமுலில் உள்ளது. கள்ளச் சாராயமோ அங்கு ஆறாக ஓடுகிறது. 

ரண்டாவதாக சாராயம் தடைசெய்யப்பட்டு வெளிநாட்டு மது மட்டும் விற்பது. இது மிசோராம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அமுலில் உள்ளது. 

மூன்றாவதாக வருடத்தில் ஒரு நாளில் மட்டும் அதாவது காந்தி ஜெயந்தி, புத்த ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை கொடுப்பது.(ஆனாலும் பிளாக்கில் விற்பனை உண்டு) இப்படி கேலிக்கூத்தான மதுவிலக்குகள் இங்கே அமுல்படுத்தப்படுகின்றன.

ஆந்திர மாநிலத்தில் வேளான் அமைச்சர் டி.கி.வெங்கடேஷ் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்கும் கணவரை பொது இடத்திற்கு அழைத்து வந்து உதைக்கும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என அறிவித்திருக்கிறார். நல்லவேளை தமிழ்நாட்டில் அப்படியாரும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் மக்கள் தொகையில் பாதிப்பேர் அடிவாங்கியிருப்பார்கள்.

இங்கேதான் அரசே மதுபாட்டில்களிலேயே மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. குடி குடியை கெடுக்கும் என்ற அதி அற்புத வாசகங்களை பொறித்து விட்டதே. அதுவே போதாதா?

காவல்துறையில் மதுவிலக்கு : 

இங்கே மதுவிலக்கு காவல்துறை என்று ஒன்று உள்ளது. அதற்கு காவலராக பணியாற்ற கடும் போட்டி. மதுவை ஒழிக்க அல்ல- வருமானத்திற்கு. காவல்துறை பிரிவுகளிலேயே வருமானம் கொழிக்கும் பிரிவாக அது விளங்குவதால்.இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, வருவாய்துறை என அரசுத் துறைகளில் பெரும்பான்மையானவற்றில் பெரும்பான்மையினர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். அரசாங்கம் நடக்காமல் தள்ளாடுவது இதனால்தான். தமிழ்நாட்டில் மக்களுக்கான மருத்துவம் -பாதுகாக்கப்பட்ட குடிநீர் -தரமான சாலைவசதி -தடையில்லா மின்சார வசதி - இலவச கல்வி என அடிப்படை வசதிகள் எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு தரமான மதுவகை வேண்டும் என்று மட்டும் கவலைப்படுகிறது. மேட்டுக்குடி மக்கள் சாதாரண மதுவகைகளை பயன்படுத்தி உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அக்கறையுடன் அரசு புதிதாக எலைட் ஷாப் எனப்படும் உயர்தர மதுபானக் கடைகளை திறந்துள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் இனி புதிதாக எந்த ஒரு மதுக்கடைகளையும் திறப்பதில்லை என 2008ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இது வெளியிடப்பட்டதால் அதற்கு எதிராக தற்போதைய தமிழக அரசு அதை மாற்ற முடிவு செய்து புதிய கடைகளை திறந்துள்ளத. நாட்டு மக்களின் சுகாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் அதை நாசப்படுத்துகிறது.


யாருக்கு லாபம்: 

சுதந்திரப் போராட்ட காலத்தில் பஜாஜ், பிர்லா ,அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி போன்ற தொழில் அதிபர்கள் மகாத்மா காந்திக்கும் ,ஹபீப் போன்ற தொழில் அதிபர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்திற்கும் தங்களின் பணத்தை கொடுத்து உதவினர் ஆனால் இப்பொழுது தங்கள் அரசியல்வாதிகளோ அம்பானி,மல்லய்யா,ரத்தன் டாட்டா போன்ற பண முதலைகள் மேலும் பணம் உண்டாக்க பணம் வாங்கி கொண்டு அவர்களுடைய தொழில் வளர உதவி செய்கின்றனர் ஏன் கூறுகின்றேன் என்றால் அப்படியானால் யார்தான் மது விற்பனையால் அதிகம் பலன் அடைகிறார்கள்?

மது விலக்கை கொண்டுவர மறுக்கும்  உண்மையான காரணம்:
மதுவிலக்கை அமல்படுத்து வதற்கான எதிர்ப்பும் இங்கிருந்துதான் வருகிறது. மது விலக்கைக் கொண்டுவந்தால் அரசின் வருமானம் குறையும் என்று அடுத்தடுத்து வரும் அரசுகள் தொடர்ந்து சொல்கின்றன. . சமமான வாய்ப்புடன் பல நிறுவனங்கள் போட்டியிடும் நடைமுறை இத்துறையில் இல்லை. அரசின் ஏகபோகமாக உரிமையின் கீழ் இந்த வணிகம் இருக்கிறது. அதில் எக்கச்சக்க ஊழல் பணம் விளையாடுகிறது என்பதுதான் அரசு அதைத் தன் பிடியில் வைத்திருப்பதற்கும் மது விலக்கைக் கொண்டுவர மறுப்பதற்கும் உண்மையான காரணம். அந்தப் பணம் அரசியல்வாதிகளின் கையில் சுழன்ற படியே உள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்’ என்று பெயர். Tamil Nadu State Marketing Corporationஎன்பதைத்தான் சுருக்கி TASMAC என்கிறார்கள்.மது வகைகளின் மொத்த விற்பனைக்காக 1983-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்.முதல்வராக இருந்தபோது  இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 

விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, ஒயின் மற்றும் பீர் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்க பாலாஜி டிஸ்டிலரீஸ், எம்.பி. டிஸ்டிலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்டு டிஸ்டிலரீஸ், சிவாஸ் டிஸ்டிலரீஸ், சாபில் டிஸ்டிலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தார்கள். எம் .ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ‘சாராய உடையார்’ என்று பெயர்பெற்ற ராமசாமி உடையார்க்கும் எம் .ஜி.ஆர். க்கும் இருந்த சாராய தொடர்ப்பு  மூலம் அதிகமான பணம் எம் .ஜி.ஆர். க்கு கைமாறி உள்ளதாக கூறுவார். கொழிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் வந்தால், வருமானம் பாதிக்கலாம் என்பதால் புதிய லைசென்ஸ் யாருக்கும் தர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது தனிக்கதை.

டிஸ்டிலரீஸ் நிறுவனங் களில் முக்கியமான ஒன்றாக இருந்தது மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம். இது சசிகலாவின் நெருங்கிய உறவினருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனம். இதனால் அவர்களுக்கு அதிகமான லாபம் கொளிகின்றனர் இது போக விஜய் மல்லையாவின் யுனைடட் புரூவரீஸ் குரூப் நிறுவனத்துக்கு ஏக போக லாபம்.

ஆட்சிக்கு வந்தவுடன்தான் சுருதி மாறுமே..! டாஸ்மாக் மூலமாகக் கிடைத்த வருமானத்தைப் பார்த்த கருணாநிதி, ஜெயலலிதாவின் வழியையே தானும் பின்பற்றி விற்பனையைத் தொடர்ந்தார். இரண்டு ஆட்சியிலும் ஆண்டுவாரியாகக் கிடைத்த வருமானம்:

 2003-04 – 3,639 கோடி, 2004-05 – 4,872 கோடி, 2005-06 – 6,030 கோடி, 2006-07 – 7,473 கோடி, 2007-08 – 8,821 கோடி, 2008-09 – 10,601 கோடி, 2009-10 – 12,491 கோடி.2010-11- 14000 கோடி, 2011-12 -18000 கோடிஅதாவது, 1983-ம் ஆண்டு வெறும் 183 கோடியாக இருந்த மது விற்பனை, இன்றைக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. பணவீக்கம், விலை ஏற்றம் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும்… தமிழ்க் குடும்பங்களில் அரசாங்க மதுபானம் எப்படி வெள்ளமாக ஓடுகிறது என்பது புரியும்!நோகாமல் கோடிகளைக் குவிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் புதிய மனிதர்கள் பலர் உள்ளே நுழைந்து இருப்பதும், அவர்கள் தி.மு.க. சார்பானவர்களாக, அதுவும் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாக இருப்பதும்தான் கடந்த ஐந்தாண்டுகளில் சத்தமில்லாமல் நடந்திருக்கும் மற்றொரு சாதனை!” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.


 மேலும் திமுக ஆட்சியில் யார் யார் பின்னாளில் இருந்தார்கள் எனப்பார்ப்போம் 
மாகுன்ட சுப்புராமி ரெட்டியின் சகோதரர் சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது, பாலாஜி டிஸ்டிலரீஸ். எம்.பி. டிஸ்டிலரீஸ் உரிமையாளர் எம்.புருஷோத்தமன். ராமசாமி உடையார் குரூப் மோகன் புரூவரீஸ் நடத்தியது. பண்ணாரி அம்மன் சுகர்ஸ் பாலசுப்பிரமணியத்துக்குச் சொந்தமானது சிவாஸ். சாபில் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தை ஏ.சி.முத்தையா தொடங்கி இன்று எம்.ஜி.முத்து நடத்தி வருகிறார்.
2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராவதற்கு முன்புவரை ஆறு டிஸ்டிலரீஸ்  நிறுவனங்கள்தான் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பு நான்கு புரூவரீஸ்  இருந்தன.  அதன் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது. ( பிராந்தி, விஸ்கி, ரம்,ஒயின் போன்றவற்றை தயாரிக்கும் கம்பெனிகள் டிஸ்டிலரீஸ் என்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புரூவரீஸ் என்றும் அழைக்கப்படும்)

புதிய உரிமம் பெற்றிருக்கும் டிஸ்டிலரீஸ்:

1. எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ். 2. கால்ஸ் டிஸ்டிலரீஸ் 3. எலைட் டிஸ்டிலரீஸ், 4. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட், 5. கிங் டிஸ்டிலரீஸ்

புதிய உரிமம் பெற்றிருக்கும் புரூவரீஸ் :

1. எஸ்.என்.ஜே. புரூவரீஸ், 2. எலைட் புரூவரீஸ், 3. எம்.பி. புரூவரீஸ், 4. டிராபிக்கல் புரூவரீஸ்.

 இந்த கம்பெனிகளுக்குள் ‘மிக்ஸிங்’ ஆகியுள்ள முகங்கள் யார் யார்?

1.       எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெயமுருகன், கீதா ஆகிய இருவர் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி கதை – வசனத்தில் உருவான ‘உளியின் ஓசை,’ ‘பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் இந்த ஜெயமுருகன்.

2.       எலைட் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தி.மு.க. மத்திய அமைச்சர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. இதன் மேலாண்மை இயக்குநராக ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த் என்பவரும், இயக்குநர்களாக ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசூயாவும், இளமாறனும் இருக்கிறார்கள்.

3. டிராபிக்கல் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக ரேணுகா குமார், சரத்குமார், பிரசன்னா நடராஜன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். சரத்குமார் வேறு யாருமில்லை… கலைஞர் டி.வி-யில் 20 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், அதன் நிர்வாக இயக்குநர். அதன் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக கவனித்து வருபவர். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கும் மும்பை ஷாகித் பால்வாவிடம் 200 கோடிக்கும் மேலாக ‘கலைஞர் டி.வி.’-க்குப் பெற்ற சர்ச்சையில் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் இருப்பவர் இந்த சரத்குமார்.
4.       கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜி.என்.எஸ். கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். அருள்மணி சேகரன், ராஜசேகரன், நடேசன், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேர் இதன் இயக்குநர்கள். ”காரைக்கால் பகுதி மது வர்த்தகத்தில் நீண்ட காலமாக இருந்த வாசுதேவனின் குடும்பம் ஒரு காலத்தில் காங்கிரஸ் அனுதாபம் கொண்டது.

 கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாசுதேவன் விரும்பினார். ராஜாத்தி அம்மாளின் ஆசியைப் பெற்றுள்ள காரைக்கால் பகுதி தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் இவரை உரிய இடத்தில் அறிமுகப்படுத்தினார். தேர்தலில் போட்டியிட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மது ஆலை நடத்தும் பம்பர் பரிசு கிடைத்தது!” என்கிறார்கள் 

 6.     காரைக்கால் பகுதி தி.மு.க-வினர்.கிங் டிஸ்டிலரீஸ் என்பது தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமானது.இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட், தரணிபதி ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மது ஆலைக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது அரசு தரவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி தரப்பட்டது. தரணிபதி ராஜ்குமாரின் அப்பா கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பொறுப்பை முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.


 ”இந்தக் காலத்தில் யார் ஆளும் கட்சியாக வந்தாலும்,  தங்கள் கட்சி ஆட்களுக்கு சில சலுகைகள் காட்டுவார்கள். அது சகஜமாக நடக்கிற விஷயம்தான். ஆனால், இந்த மது ஆலைகள் விஷயத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துமே தி.மு.க. சார்பானவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. டான்சி வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டே, ‘அரசு பதவியில் இருப்பவர் அரசாங்க நிலத்தை வாங்கக் கூடாது’ என்ற விதிமுறையை மீறியதுதான். முதல்வர் நாற்காலியில் இருக்கும் கருணாநிதி அமைத்த கோபாலபுரம் வீடு தொடர்பான அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பவர் ஜெகத்ரட்சகன். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர். அவருக்குத் தரப்பட்டுள்ள மதுபான அனுமதியைத் தொடர்ந்து வாலாஜாபாத்தில் ஆலை தொடங்கப்பட்டுவிட்டது. ஜெகத்ரட்சகனின் மகனும் மனைவியும் இதன் இயக்குநர்களாக அதிகாரபூர்வமாக இடம்பெற்று உள்ளார்கள்.

ஜெகத்ரட்சகனின் இன்னொரு நிறுவனமான ஏ.எம். புரூவரீஸ் பீர் தயாரிக்கும் அனுமதிக்கு காத்திருக்கிறது. ‘ஏ’ என்பது முதல் மனைவி அனுசுயா என்றும், ‘எம்’ என்பது மற்றொருவரான மாலா என்றும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

”மாறன் குடும்பத்துடன் மோதல் வந்ததைத் தொடர்ந்து, போட்டியாக ‘கலைஞர்’ டி.வி-யை நிறுவியது முதற்கொண்டு தி.மு.க-வுக்கு மிக நெருக்கமாகிவிட்டார் சரத்குமார். அந்த டி.வி-யில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ள நிலையில்… குடும்பக் கூட்டாளி என்றே சொல்லக்கூடிய அளவுக்கு உள்ளவர் இந்த சரத்குமார். இவருக்கு மது ஆலை உரிமம் கொடுப்பது என்பது தன் குடும்பத்துக்கே கொடுத்துக்கொள்வதாகும்!” என்று குறிப்பிடும் அதிகாரிகள்,


”மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் எஸ்.என்.ஜே. நிறுவனத்துக்கு டிஸ்டிலரீஸ் மற்றும் புரூவரீஸ் ஆகிய இரண்டு உரிமங்களும் தரப்பட்டுள்ளன. ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் மூலமாக ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ படங்களை எடுத்த ஜெயமுருகனுக்கு இந்த உரிமம் தரப்பட்டது பளிச்சென்று கண்ணை உறுத்தத்தானே செய்யும்!” என்கிறார்கள்.

டி.ஆர்.பாலுவுக்கு தரப்பட்டுள்ள உரிமங்களுக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை. காரைக்கால் வாசுவுக்கு தரப்பட்டுள்ள லைசென்ஸுக்குப் பின்னணியாக ராஜாத்தி அம்மாளின் ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. இப்படி அனைத்துமே தன்னுடைய சுற்றம் சூழலுக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது…” என்ற ஆதங்கம் விஷயம் அறிந்தவர்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டு வருகிறது.

 இது போன்ற மதுபான அனுமதிகள் எந்த விதிமுறைப்படி தரப்படுகின்றன? ஆலைகளை அமைக்கும்போது அப்பகுதி மக்களிடம் வெளிப்படையான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளதே… அவை நடத்தப்பட்டதா? டி.ஆர்.பாலுவின் ஆலை அனுமதிக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் போலீஸால் தாக்கப்பட்டார்களே… அந்த விவகாரம் என்ன ஆனது? என்பது போன்ற சந்தேகங்கள் வலுப்பட்டே வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழக அரசு இருக்கிறது!


அதனால்தான் மது விலக்கு பற்றி எந்தக் கட்சிக்கும் உண்மையான அக்கறை இல்லை.அடுத்த பத்தாண்டில் விற்பனை வரி (மதிப்புக் கூட்டு வரி), மது வருமானத்தைவிடப் பல மடங்கு அதிகரித்துவிடும். சொத்து வரியும் வேகமாக அதிகரித்தபடியே இருக்கும். அப்படி இருக்கும்போதும் மது வருமானத்தை விட்டுவிட முடியாது என்று அரசுகள் திரும்பத் திரும்பச் சொல்லும்.உண்மையான காரணத்தை எந்தக் கட்சியும் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசப்போவதில்லை.இரண்டு திராவிட இயக்கங்களும் எதிரெதிர் துருவமாக அரசியலில் இருந்தாலும் மது விசயத்தில் ஒரு கொடியில் பூத்த இருமலர்களாகவே இருக்கின்றன.படிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய அரசு- குடிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.வெட்கங்கெட்ட இந்த தேசத்தில் வாழ்வது விபரீதம் என அறிவார்ந்த மக்கள் முடிவு செய்யுமுன் விழித்துக் கொள்ளுமா அரசு? 



1.குடங்குடமாய் பாலையும் கூடவே ஒரு துளி விசமும் கொடுத்தால் எப்படி இருக்கும் அதே போல் தான் இப்பொழுது அரசு ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே ஒரு துளி விஷமாய் மது விற்பனை செயபடுகின்றனர் . 

2.முன்பெல்லாம் மது குடிப்பது அவமானம். இப்போதோ அதனால் அரசுக்கு வருமானம். 

3.அதேபோல, முன்பு மது குடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதோ மது குடிக்காதவர்களைத்தான் விரல்விட்டு எண்ண முடிகிறது. 

4.காலப்போக்கில், "மணமகன் தேவை' விளம்பரம் செய்வோர் "மணமகன் குடித்தாலும் பரவாயில்லை' என்ற சலுகை அளித்துத்தான் மணமகனைத் தேட வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.

5.கிராமங்களில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்காக பெரிய கூட்டமாக மக்கள் நிற்பார்கள்..அதுபோன்று இப்போது அரசு நடத்தும் டாஸ் மாக் சாராயக்கடைகளில் இந்த குடிகாரர்களின் கூட்டத்தை காணமுடிகிறது..
அரசு பேருந்துகளில் ஐம்பது காசு ஏற்றிவிட்டால் தாம் தூம் என்று குதிக்கிற இந்த குடிகாரக் கூட்டம், தினமும் குறைந்தது 300 ரூபாய்க்காவது குடிக்காமல் வீட்டுக்கு  போகாது.

மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும். 

5.விலைவாசி ஏறி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டாலும் "டாஸ்மாக்' கடைகளில் பாதிக்கும் மேல் விற்பனையாவது ஏழைகளின் புண்ணியத்தால்தான்.
6.1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம்
139 கோடி. இப்போதைய நிலவரப்படி 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது 150 கோடி என்ற இலக்கைத்தாண்டி 300 கோடிக்கு விற்கப் பட்டதாக சொல்வது மகிழ்ச்சி அளிப்பதைவிட பல குடும்பங்கள் அதனால் பாதிக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா.?


மதுவை ஒழிக்க வழிகள்: 

1.மும்பையில் ஒரு பகுதியைச் சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்துப் போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். இதனை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். 

2. பீர்/விஸ்கிக்கு மாற்றாக அரசே மதுக் கடைகள் மூலமாக கள் வியாபாரம் சில காலங்களுக்கு செய்யலாம். இது கள்ள சாராயத்தை பெருமளவு குறைக்க உதவும்.

3.பார்களை ஒட்டு மொத்தமாக மூடிவிட வேண்டும். இந்த கரை வேட்டிகள் இங்குதான் கொள்ளையடிக்கிறார்கள்.

4. பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இதில் பல நண்மைகள் இருக்கின்றன. வீட்டில் போய் குடிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இரண்டாவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும் கூட்டம் குறையும். விபத்துகள் தவிர்க்கப் படும்.

5. கண்கானிக்கக் கூடிய காவலர்கள் ஏதாவது கையூட்டு பெற்று, புதிய திட்டத்தை குளறுபடி செய்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் போடப்படுவார்கள் என்ற உத்திரவு வர வேண்டும்.

6. மிடா குடியர்களை குடியிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் உருவாககப் பட வேண்டும்.

7.இலவசங்களை அறவே ஒழிக்க வேண்டும் காரணம் இலவசங்கள் கொடுப்பது ஏழைகாக மதுவை அருந்தி அதிகம் சீரழிவது  ஏழைகள்தான் ஆகையால் மதுவை நிறுத்தினால் அவர்கள் பணம் மிச்சம் ஆகும் மேலும் அவர்களுடைய வளமும் வளரும் 


(தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசு முழுமையாகத் தன் வசம் வைத்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதாகவும் கூறுகிறது. மது விற்பனையால் ஏழை மக்களுக்குக் கேடுதான் அதிகமே ஒழிய அந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்குச் செய்யப்படும் நன்மை மிக மிகக் குறைவே என்பது நிதர்சனம். 


வார்த்தைக்கு வார்த்தை "அண்ணா நாமம் வாழ்க!'' என்று கூறும் ஜெயலலிதா, மதுவிலக்கு கொள்கையில் அண்ணாவை பின்பற்ற வேண்டும். அரசின் கஜானாவை பற்றி கவலைப்படாமல் அண்ணா, பூரண மது விலக்கை அமுல்படுத்தியிருக்கும்போது, வாக்குப் பெட்டியை கவனத்தில் கொண்டு போதைக்கு வக்காலத்து வாங்க ஜெயலலிதா முயற்சிக்கக் கூடாது. 

எனவே ஜெயலலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி அண்ணா வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா அல்லது சில ஆயிரம் ஓட்டுக்காக கருணாநிதி வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா என்று கேட்க வேண்டியுள்ளது. 
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பது போல,ஓட்டுகளை வாங்குவதற்காக இலவசங்களை அள்ளிக்கொடுத்து, தமிழக மக்களின் பெரும்பாலோரை உழைக்கும் எண்ணம் அற்றவர்களாக, திமுக-அதிமுக அரசுகள் ஆக்கிவிட்டன. 

மாணவர்களை மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைக் குடியிலிருந்து மீட்க ஒரேவழி, ""மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவதுதான்''. 

ஒரு நாணயத்தின் இரு பக்கம் தான் திமுக - அதிமுக அரசுகள் எனக்கூறும்  மக்களின் மன நிலையை மாற்றி அண்ணா நாமம் வாழ்க!'' என்று கூறும் நம் முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கு கொள்கையில் அண்ணாவை பின்பற்றி  அரசின் கஜானாவை பற்றி கவலைப்படாமல் அண்ணா,மகாத்மா காந்தி கேட்ட பூரண மது விலக்கை இந்த காந்தி ஜெயந்தி அன்று நிறைவேற்றுவாரா பொறுத்திருந்து பார்ப்போம்?

            
SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கோரிக்கை :
இதனை தேசத் தந்தை காந்திடியகள் பிறந்ததை நாட்டு மக்கள் நினைவு கூறும் அக்டோபர் - 2 க்குள் அறிவிக்க வேண்டும். இல்லையனில் இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2 ல் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைநகரங்கள் உட்பட முக்கிய நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தும். தொடர்ந்து 15 நாட்கள் மதுவின் தீமையை விளக்கியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுர விநியோகம், தெரு நாடகம் உட்பட பிரச்சார இயக்கம் நடைபெறும். 
அதைத் தொடர்ந்து அக்டோபர் 17 ல் சென்னையில் தலைமை செயலகம் முன்பும் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம், முன்பும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். முன்னதாக பல்வேறு தலைவர்கள் பங்குபெறும் கருத்தரங்கம் சென்னையில் வரும் 22 ம் தேதி நடைபெறும்.மக்களுக்காக நடைபெறும் இப்போராட்டங்களில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்வர். மாணவ மாணவிகள், பெண்கள் உட்பட பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

Jayadev Das said...

sUPER!!

Post a Comment

Dua For Gaza