Sunday, August 19, 2012

நமதூர் திருகுர்ஆன் ஓதும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது

நமதூரில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் சிறுவர், சிறுமியருக்கு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடத்தப்பட்டுவருகின்றது. இதனை தாசின் அறக்கட்டளை சார்பில் நமதூர் ஆலிம்களின் ஒத்துழைப்போடு சிறப்பான முறையில் செய்துவருகின்றனர். இதற்காக நமதூர் ஜமாஅத்தும் நல்ல ஊக்கமும், பங்களிப்பும் செய்துவருவது மகிழ்சியானது. இந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில் திரளாக மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இதில் தஜ்வீது, கிராஅத், உச்சரிப்பு ஆகிய குர்ஆனை முறைப்படி ஓதுவதின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு நமதூர் பிரமுகர்களால் பரிசு வழங்கப்பட்டது.




0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza