Wednesday, January 18, 2012

பிரிட்டனில் மீண்டும் ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பு

imagesCA65FSJ5

லண்டன்:பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரிட்டன் தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை மீண்டும் குறைக்கிறது.3ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவத்தினருக்கு பணியை இழக்க வைக்கும் தீர்மானம் உடனடியாக வெளியிடப்படும்.

ராயல் ஆம்ட் ஃபோர்ஸில்1000 பேரும், ராயல் நேவி ஃபோர்ஸில் 500 பேரும், கூர்கா பிரிவில் 500 பேருக்கும் பணி இழப்பு ஏற்படும்.

2015-ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குறைக்க பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் எண்ணிக்கையை கொண்ட தாக்குதல் படைப்பிரிவு 82 ஆயிரம் ஆக குறையும்.

கூர்கா பிரிவில் ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகம் என்றும், 3500 பேர் நீக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இப்பிரிவில் 140 பேருக்கு பணி இழப்பு ஏற்பட்டது.

1947-ஆம் ஆண்டு இந்தியா பிரிவினைக்கு பிறகு நேபாளம், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இந்திய ராணுவத்தைச் சார்ந்த 4 கூர்கா ரெஜிமெண்டுகள் பிரிட்டன் ராணுவத்திற்கு மாற்றப்பட்டது. இப்பிரிவு பின்னர் கூர்கா ப்ரிகேடு என அழைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza