Tuesday, December 6, 2011

தீவிரவாத ஒழிப்பில் போலீசுடன் இணைந்து செயல்படும் லண்டன் முஸ்லிம்கள்

கைரோ:வோர்செஸ்டரில் போலீசுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கும் சிறுபான்மையினருடன் காவல்துறைக்கு உடனான உறவை வலுபடுத்தவும் பயிற்சி அளிக்க முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வோர்செஸ்டர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வோர்செஸ்டர் கல்லூரியில் பயிலும் 17  வயதையுடைய ஷபாஸ் அலி என்னும் இளைஞர் கூறியதாவது; பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நான்தான் மிகவும் குறைந்த வயதையுடையவர் என்றும் அனைவரது கருத்துக்களையும் கேட்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் கூறினார். கில்ட்ஹாலில் நடந்த பயிற்சியில் இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் மேற்கு மெர்சியா போலிசும் வோர்செஸ்டர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவும் கலந்து கொண்டனர். இதுவே நகரில் முதன்முறையாக நடந்த பயிற்சி நிகழ்ச்சியாகும்.

ஆபரேஷன் நிகோலே என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் போலீசார் முடிவெடுப்பதில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர் என்று தெரிவிப்பதற்காகவும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் குறித்து முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜானெட் கூறியதாவது ” இந்நிகழ்ச்சி மூலம் முஸ்லிம் சமூகத்துடன் நல்லுறவு ஏற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்த பயிற்சி குறித்து முஸ்லிம்கள் கூறியதாவது; முஸ்லிம்களுக்கும் போலீசுக்கும் இடையில் உறவு வலுபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முஹம்மத் மணிர என்னும் தொழில் அதிபர் தெரிவிக்கையில் “காவல்துறை மற்றும் முஸ்லிம்கள் இடையில் நல்ல தொடர்பு ஏற்படவேண்டும், ஒவ்வொரு நபரும் தன்னால் முடிந்தவரை போலீசுக்கு உதவ வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முஸ்லிம் சமூகம் சமுதாயத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தீவிரவாத தடுப்பு நடவாடிக்கைகளில் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் 7/7  தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் மூலம் 2  மில்லியன் முஸ்லிம் மக்கள் பிரிட்டனில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza