Tuesday, July 12, 2011

உலக மக்கள் தொகை தினம்:இந்தியாவும்-சீனாவும் இணைந்து கடைபிடித்தன

people
பீஜிங்:உலகத்தில் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இரு நாடுகளான சீனாவும், இந்தியாவும் இணைந்து உலக மக்கள் தொகை தினத்தை கடைபிடித்தன. வடக்கு சீன நகரமான டியான்ஜினில் நடந்த ஒருங்கிணைந்த அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத் பங்கேற்றார்.

உலக மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக்கொண்ட நாடுகள் என்ற நிலையில் ஒருங்கிணைந்த முறையில் மக்கள்தொகை தினத்தை கடைபிடித்தது பொருத்தமானது என குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். சர்வதேச அளவில் தலைமைத்துவரீதியாக பங்குவகிப்பதில் இரு நாடுகளும் வெற்றிக்கண்டுள்ளதாக கூறிய ஆசாத், பரஸ்பர ஒத்துழைப்பு வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த நயத்தகு எதிர்காலம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza