Sunday, July 10, 2011

தென்காசி அருகே போலீஸ் சோதனையில் வெடிப்பொருட்களுடன் வாலிபர் கைது!-ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சப்ளையா?

bomps அச்சன்புதூர்:தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், ஜெயசந்திரன், வேலுச்சாமி மற்றும் போலீசார் காசிதர்மம் குளத்தின் கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற வாலிபரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது, 10 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 10 ஜெலட்டின் குச்சிகள், 3 கட்டு சுருள் கம்பி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கு முறையான அனுமதி சீட்டு இல்லை. இதனால் போலீசார் வெடிபொருட்களை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த சேர்ந்த மரம் அருகேயுள்ள இ.சுப்பையாபுரத்தை சேர்ந்த ஞானதாஸ் (29) மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் வெட்ட வெளிச்சமானது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் வெடிக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்காசி பகுதியில் ஏற்கனவே வகுப்பு வாத வெறியை கிளறிவிட்டு கலவரத்தை தூண்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பல முயற்சிகளை முன்பு மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இந்நிலையில் தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூரில் ஞானதாஸ் என்ற வாலிபர் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது பின்னணியை குறித்து முழுமையாக போலீஸார் விசாரிப்பார்களா? அல்லது பாறை உடைக்க, கிணறு வெட்ட என வழக்கை மூடுவார்களா?

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza