Wednesday, July 6, 2011

ஈராக்:இரட்டை குண்டு வெடிப்பில் 35 பேர் படுகொலை

03_BOMB3
பாக்தாத்:பாக்தாதிற்கு அருகே அரசு அலுவலகத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. பாக்தாதிலிருந்து 20 கிலோமீட்டர் வடக்கே தாஜி நகரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அரசு அலுவலகத்தின் பார்கிங் பகுதியில் காரும், இன்னொரு உபகரணமும் வெடித்து சிதறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள் கிழமை ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்புகளும், தாக்குதல்களும் அதிகமாக நடந்த கடந்த மாதம் ஈராக் மக்களின் உயிருக்கு கடுமையான விலையை அளிக்கவேண்டிவந்தது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் 271 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 அமெரிக்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இவ்வருட இறுதியில் ஈராக்கிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ள அமெரிக்க ராணுவத்தினருக்கு 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட பெரிய இழப்பாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza