Monday, June 20, 2011

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்புகிறார்

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அடுத்த ஆண்டு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதோடு, தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது லண்டனில் தங்கியிருக்கும் அவர், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். லண்டனில் இருந்தபடியே லாகூரிலுள்ள தனது ஆதரவாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார்.

அடுத்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தான் திரும்புவதாகக் கூறியதோடு, 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza