Tuesday, March 15, 2011

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.

மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனைக் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக
அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். சுனில் ஜோஷி கொலைவழக்கில் மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் கொலை வழக்கினை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொலைச் செய்ததற்கு காரணம், ரகசியம் வெளியாகிவிடும் என்ற அச்சமாகும்.

ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்வதற்கான மத்தியபிரதேச அரசின் தீர்மானம் கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலாகும் என சி.பி.ஐ சந்தேகிக்கிறது.

2008-ஆம் ஆண்டு நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கையும், 2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கையும் என்.ஐ.ஏ தற்பொழுது விசாரித்து வருகிறது. இத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இதர குண்டுவெடிப்புகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.

மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐயும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களின் அரசுகளும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவிடம் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza