Tuesday, March 15, 2011

மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.

ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுத் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கோஹில் தெரிவித்தார்.

தற்போது அமுலிலிருக்கும் சட்டங்களை மீறி ராகவனின் லண்டன் பயணத்திற்கான பில்லை நிறைவேற்றுக் கொடுத்துள்ளது என கோஹில் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் மூலம் 2002-இல் குஜராத் இனப் படுகொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு குறித்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.

உண்மையில், சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்தவற்றில் ஆர்.கே.ராகவன் தகிடுதித்தங்கள் புரிந்துள்ளார். கடுமையான குற்றங்கள் மோடியின் மீது சுமத்தப்பட்ட பிறகும், அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என ஆர்.கே.ராகவன் எழுதிக் கொடுத்தது இதனடிப்படையிலாகும்.

குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் நோக்கு(prima facie) சரியானது என கண்டறிந்த பிறகுதான் மோடியின் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என ராகவனின் அறிக்கை சிபாரிசுச் செய்தது.

உச்சநீதிமன்றம் தன்னிடம் நம்பி ஒப்படைத்த பணியில் வஞ்சம் புரிந்துள்ளார் ராகவன். ராகவன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடிச் செய்த குஜராத் அரசு சிறப்பு புலனாய்வுக்குழு பொது நிறுவனமல்ல எனவும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என பதிலளித்தது.

ராகவன் மீது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என அஞ்சி இத்தகைய பதிலை குஜராத் அரசு அளித்தது என காங்கிரஸ் தலைவர் கோஹில் குற்றஞ்சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza