Monday, March 28, 2011

அரை இறுதியைக் காண அஜ்மல் கசாப்பை ஏன் அழைக்கவில்லை?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் அரை இறுதிப் போட்டியைப் பார்க்க பாகிஸ்தான் பிரதமர் கிலானி இந்தியா வருகிறார். இதனை சிவசேனை தலைவர் பால் தாக்கரே கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது சம்பந்தமாக சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.
அமைதி நடவடிக்கை என்ற பெயரில் மொஹாலியில் நடைபெறும் அரை இறுதிப்போட்டியைப் பார்க்க பாகிஸ்தானின் பிரதமரையும் ஜனாதிபதியும் அழைக்கும்போது மும்பை தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளி அப்ஸல் குருவுக்கும் அழைப்பு விடுக்காமல் ஏன் அநீதி இழைக்கப்படுகிறது என பால் தாக்கரே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக்கிஸ்தான் அதிபர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு கிரிக்கெட் பார்க்க வந்து சென்றாலும் பிரச்னைகள் தீராமல் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிரி நாடு மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் உப்பைத்தூவும் வேலையை நமது பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza