Thursday, March 17, 2011

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் பரிசீலனையில்

புதுடெல்லி:வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் துவங்குவதுக் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் தெரிவித்தார்.
ஆன்றோ ஆண்டனி எம்.பி மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எஸ்.எம்.கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.
கடுமையான மோதல் நடைபெற்று வரும் லிபியாவிலிருந்து 16,200 இந்தியர்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு வர விரும்பிய அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் ஷேஃப் ஹோம் கமிங் என்ற பெயரில் இதற்காக உருவான செயல் குழுவிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல விவகார அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் தலைமை வகித்தன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza