Friday, January 21, 2011

குழந்தைகளை கொன்று குவித்த கொடூர மருத்துவர்

இலண்டன் : தன்னிடம் பிரசவம் பார்க்க வந்த வெளிநாட்டவர் மற்றும் ஏழை பெண்களுக்கு முறைகேடான அபார்ஷன் செய்ததாகவும் ஏழு குழந்தைகளின் முதுகெலும்பை கத்தரிக்கோலின் உதவியுடன் துண்டித்துக் கொன்றதாகவும் அமெரிக்க மருத்துவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிலாடெல்பியா மருத்துவர் கெர்மிட் கோஸ்னல் 15 வயது பள்ளி மாணவன் உள்ளிட்ட 9 பணியாளர்களின் உதவியுடன் இக்காட்டுமிராண்டி செயலை செய்ததாக டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. 69 வயதான கோஸ்னல் முறைகேடான அபார்ஷனின் போது அதிக அனஸ்தீஷியா கொடுத்ததால் 41 வயது தாயரையும் கொன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோஸ்னல் தன் 30 வருட மருத்துவ பணியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெண்கள் மருத்துவ சங்கம் என பெயரிடப்பட்டுள்ள அம்மருத்துவமனை உண்மையில் கொடூரங்களின் வீட்டை போல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனை முழுக்க ஏராளமான பைகளும் அபார்ஷன் செய்யப்பட்ட கரு உள்ளடக்கிய கண்ணாடி குவளைகளுமாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி :பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza