Saturday, January 29, 2011

"சங்கி தீவிரவாதம்" : தீவிரவாதிகளுக்கு குஜராத்தில் அடைக்கலம்.

புதுதில்லி, ஜன.28- குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை அவர் "சங்கி தீவிரவாதம்" என்றும் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில், மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். "ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். சுவாமி அசிமானந்த் போன்றவர்களுக்கு குஜராத் அடைக்கலம் வழங்குகிறது." என்றும் திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza