Thursday, January 27, 2011

கடைசி நாள்...


குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர், நாளை (ஜனவரி 28) மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். துணை கலெக்டர், வணிக வரித்துறையில் உதவிக் கமிஷனர், மாவட்ட பதிவாளர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 257 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 முதல் நிலைத் தேர்வை, வரும் ஜூன் 5 ல் மாநிலம் முழுவதும், பல்வேறு நகரங்களில் டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இதற்கு விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாள். நாளை மாலை 5:45 மணிக்குள், விண்ணப்பம் செய்ய வேண்டும். பட்டதாரிகள் அனைவரும் இத்தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza