Tuesday, December 7, 2010

பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!

பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!
450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!

வரலாற்றின் சின்னமாய்
வீறுகொண்டு பயணித்த - பள்ளி
பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி
ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?

விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!

கல்லடிப்பட்ட குளம்கூட
அலை எழுப்பும் எதிர்ப்பாய்!
கலையாக நின்ற பள்ளி கல்லானபோது
பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!

நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை
காட்டில் பெற்றதே முரண்பாடு!

பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்
நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!

வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்
வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி
ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது
துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!

சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...
பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...
அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'

நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"
ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு
மூன்று பங்கு எப்படி சாத்தியம்?

விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!
விழித்திரையை சாத்தியம் என்று!
நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!
நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!

தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்
ஒரு தட்டு இறங்கிவிட்டது!

நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?
நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?

சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!
"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்
"அக்கணப் பொழுது"
ஆக்கம்:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza