Friday, December 10, 2010

வளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளின் விபரங்கள் !

துபாய் : அரேபிய வர்த்தகம் எனும் வளைகுடா வணிக இதழ் வளைகுடாவில் உள்ள சக்தி வாய்ந்த இந்திய பிரபலங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆறு மாதங்களாக நடைபெற்ற இவ்வாய்வில் 500 நபர்களை தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து வடிகட்டி 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் நபர்களை அவர்களின் நிறுவனத்தின் செல்வாக்கு, வணிகம், மக்களுடன் உள்ள நெருக்கம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்கே குழும உரிமையாளர் யூசுப் அலி உள்ளார். இவரின் குழுமத்தின் ஒரு அங்கமான லூலூ ஹைபர் மார்கெட் வளைகுடாவின் எல்லா நாடுகளிலும் பரவி வியாபித்துள்ள ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரின் குழமத்தில் 29 நாடுகளை சார்ந்த 22,000 மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் குழுமங்களிலேயே தமிழ் நாட்டை சார்ந்த சையது சலாஹூதினால் நிர்வகிக்கப்படும் ஈ.டி.ஏ குழுமத்தில் மாத்திரம் இதை விட அதிகமான நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை வணிக சக்ரவர்த்தியான யூசுப் அலிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக 15 நாடுகளில் 900 கடைகளை வைத்துள்ள லேண்ட் மார்க் குழுமத்தின் நிறுவனர் முகேஷ் ஜெக்தானியும் ஸ்டாண்டார்ட் சார்டர்ட் வங்கியின் ஆப்பிரிக்க, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பணிகளை நிர்வகிக்கும் சங்கர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார். நியூ மெடிகல் சென்டர் மற்றும் யூ. ஏ. ஈ எக்ஸ்சேன்ஜ் உரிமையாளர் ஷெட்டி நான்காம் இடத்திலும் 70 வருடங்களுக்கு முன்னாலேயே துபாய்க்கு வந்து அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸி எனும் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் பஞ்சோலியா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

கல்பார் கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் துணை தலைவர் முஹம்மது அலி, பெட்ரோ  கெம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோகேஷ் மேத்தா, யூனிலிவர் தலைமை நிர்வாகி சஞ்சீவ் மேத்தா, துபாய் பேர்ல் கன்ஷ்டரக்ஷன் தலைவர் சந்தோஷ் ஜோசப் ஆகியோர் முறையே ஐந்து முதல் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். முதல் பத்தில் உள்ள ஓரே பெண்மணியாக ஜூலைகா மருத்துவமனையின் நிறுவனர் ஜூலைகா தாவூத் உள்ளார்.

இப்பட்டியலில் உள்ள நபர்களில் மூன்றில் ஒருவர் சில்லறை வணிகத்தில் உள்ளனர். மேலும் கன்ஷ்டரக்ஷன், சுகாதாரம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் கோலோசுப்பவர்களும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பட்டியலில் தமிழக்த்திலிருந்து ஈ.டி.ஏ குழும தலைமை நிர்வாகி சலாஹீதின் 20வது இடத்திலும் ஈ.டி.ஏ குழும நிறுவனர் அப்துல் ரஹ்மானின் மகனும் கோல் & ஆயில் இந்தியா குழும உரிமையாளர் அஹ்மது புகாரி 44வது இடத்திலும் உள்ளனர்.

தமிழகத்தை சார்ந்த நபர்களில் அல் நபூதா மோட்டார்ஸின் தலைமை நிர்வாகி ராஜாராம் 25வது இடத்திலும் லார்ஸன் அன்ட் டுபூரோ பகுதி மேலாளர் நாகநாதன் 47வது இடத்திலும் தோஹா வங்கியின் தலைமை நிர்வாகி சீத்தாராமன் 59வது இடத்திலும் கல்ப் இன்கானின் தலைமை மேலாளர் கனேஷ் சீனிவாசன் 89வது இடத்திலும் உள்ளனர். கல்வி நிறுவங்களில் ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் வர்கீஸ் 11வது இடத்திலும் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலை நடத்தி வரும் ரபியுத்தீன் 53வது இடத்திலும் உள்ளனர்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza