Wednesday, December 1, 2010

முஷாரப் இந்தியா வர அனுமதி மறுப்பு!

இந்தியாவுக்கு வர முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிகிறது. 

வரும் சனிக் கிழமையன்று டெல்லியில் நடைபெற உள்ள இளம்தலைவர்கள் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள  முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ள இந்தியா வர உள்ள முஷாரப்புக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த மாநாட்டுக்கான சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பெயரும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza