Sunday, October 31, 2010

‘எங்களைப் பொறுத்தமட்டில் இஸ்ரேல் என்பது உடலில் வளர்கின்ற கென்ஸர் போன்றது


ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மனூச்சிர் முத்தாகி தற்போதைய ஈரான் விவகாரம் குறித்து islamonline.net இணையத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம். பேட்டி கண்டவர் இவ்விணையத்தின் செய்தியாளர் ஆமிர் லதீப்.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் நிலைகொண்டி ருப்பது, பலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கான ஆதரவு, பாரசீக வளைகுடாவின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் இஸ்ரேலின் அரசியல் நகர்வுகள் குறித்து முத்தாகி இப்பேட்டியில் தெரிவித்த கருத்துகளே இங்கு சுருக்கித் தரப்படுகின்றது.
* உங்கள் நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படுகின் றதே...
அவர்கள் (அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள்) இவ்விவகாரத் தைத் தூக்குகின்றனர். இதற்கான எவ்வித அருகதையும் அவர்களுக் குக் கிடையாது. நாம் அணுகுண்டு களைத் தயாரிப்பதற்கு முயற்சிக்க வில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
உண்மையில் இது ஈரானுக்கு எதிரான ஒரு பிரச்சாரமே ஒழிய, வேறெதுவும் இல்லை. ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்கின் றது; பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றது என்பன போன்ற மோசமான பிரச்சாரங்களை எமக்கெதிராக முன்னெடுப்பதே இவர்களின் அரசியல் நோக்கம்.

அணுகுண்டில் எமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. மேற்கு லகம் ஈரான் ரகசியமாக அணு குண்டுகளைத் தயாரித்து வருவதாக எழுப்பும் கோஷங்க ளில் ஒரு வீதமேனும் உண்மை கிடையாது. உள்நாட்டில் எமக்கு ஏற்பட்டுள்ள சக்திவள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே நாம் அமைதியான வழியில் யுரேனி யத்தை செறிவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து வகையான சர்வதேச சட்டங்களுக் கும் அமைவாகவே இதில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
சக்தி வளத் தேவையுள்ள ஏனைய நாடுகளைப் போன்றே நாமும் யுரேனியத்தை செறிவாக்கி, எமக்குத் தேவையான சக்தி வளத்தை அதிகரிக்கின்றோம். ஏனைய நாடுகளைப் போன்று இவ்வாறு செய்வதற்கான அடிப் படை உரிமை எங்களுக்கு உள்ளது.
* அணுகுண்டில் எமக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதன் கருத்தென்ன?
தற்காலத்தில் அணுகுண்டுகள் எதனையும் செய்யப்போவதில்லை. அது முக்கியமானதுமல்ல. அணுகுண்டுகள் முக்கியமானது எனின் ஆப்கானிஸ் தான், ஈராக் யுத்தங் களை வெல்வதற்கு அமெரிக்காவி னால் முடிந்திருக்கும். லெபனான் மீதான இஸ்ரேலின் யுத்தத்தின் போதும், பலஸ்தீனின் ஹமா ஸுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப் பின் போதும் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கும். முன்னைய சோவி யத் ஒன்றியம் பிரியாமல் இணைந் திருக்கும். எனவே அணுகுண்டுகள் இன்று எதனையும் செய்ய முடி யாது என்றே நாம் நம்புகின்றோம்.
* வளைகுடாவிலுள்ள ஏனைய அறபு நாடுகள் ஈரான் அவற்றின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்று கருதுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இது கூட ஒரு பிரச்சாரமே. மொத்தத்தில் எமது அணுசக்தித் திட்டம் எந்த நாட்டுக்கும் எதிரா னதோ அச்சுறுத்தலோ அல்ல. குறிப்பாக பாரசீக வளைகுடாவுக்கு சமீபகமாக இருக்கின்ற எந்த நாட் டிற்கும் நாம் அச்சுறுத்தல் அல்ல. சில பாரசீக வளைகுடா நாடுகள் எமது அணு உற்பத்தி நிலையங் களிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவிலேயே இருப்பதனால் ஈரானின் அணுசக்தித் திட்டம் எமக்கு அச்சுறுத்தல் என்று கூறி வருகின்றன. நாம் அவர்களுக்குச் சொல்கின்றோம், எமது யுரேனியம் செறிவாக்கப்படும் இடத்திலிருந்து இரண்டு கி.மீற்றர் தூரத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.
எனவே இது குறித்து அனாவசி யமாக அச்சப்படத் தேவையில்லை. நாம் கூறுகின்ற உண்மையை இந்நாடுகள் நேரில் வந்து பார்ப் பதற்கும் நாம் இடமளிப்போம். எமக்கு அஞ்சுகின்ற வளைகுடா நாடுகள் இங்கே வந்து எமது அணு சக்தித் திட்டம் எதற்காக என்பதை பரிசீலிக்கலாம். நாம் ஏற்கனவே அவர்களுக்கு இதுபற்றிப் பல முறை தெளிவுபடுத்திவிட்டோம்.
* அயல் நாடான ஆப்கானிஸ் தானில் அந்நியப் படைகள் நிலைகொண் டிருப்பது குறித்து ஈரானின் நிலைப்பாடு என்ன?
ஆப்கானில் அப்பாவிப் பொது மக்கள் மீது குண்டுகள் வீசப்படும் போது, பெனாசிர் பூட்டோ போன்ற பாகிஸ்தான் தலைவர்கள் கொலைசெய்யப்படும் போது பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் தங்கியிருப்பது பாதுகாப் பற்ற பதற்றமான ஒரு சூழ்நிலை யையே கடந்த எட்டு ஆண்டுகளாக உருவாக்கி யுள்ளது என்பதைத் தவிர வேறெதைத்தான் எம்மால் கூற முடியும். ஆப்கானிஸ்தானில் அந்நியப் படைகள் தோல்வி யடைந்து விட்டன என்பதே எமது உண்மையான தீர்ப்பாகும். எடுத் துக் காட்டாக ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ள அபின் உற்பத்தி யைக் குறிப்பிடலாம்.
அங்கே அந்நியப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை வருடாந்தம் 100 டொன் போதைப் பொருட் களும் அபினுமே உற்பத்தி செய் யப்பட்டது. ஆனால் தற்போது 8000 டொன் அபின் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலும் பிராந்தியத் தின் ஏனைய பகுதிகளிலுமுள்ள அந்நியப் படைகளை வெளியேற் றுவதற்கு ஈரான் முழு ஆதரவளிக் கும். ஆப்கானியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு கிடை யாது என்று நாம் எட்டு ஆண்டு களாகக் கூறி வருகின்றோம். தற் போதுள்ள நிருவாகம் இப்பிரச்சி னைத் தீர்ப்பதற்குத் தவறிவிட்டது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் மாத்திரமே ஆப்கான் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். கடந்த மாதம் இம் மூன்று நாடுகளும் இஸ்லாமாபாத் திலே ஒன்றுகூடின. அதன்போது ஆப்கான் நெருக்கடியை தீர்ப்பது குறித்தும் வெளிநாட்டுப் படை களை வெளியேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
ஆப்கானிலுள்ள வெளிநாட்டுப் படைகள் அங்கு நீடிக்கும் ஒரு அரசியல் இடைவெளியினால் பெரும் சவாலை எதிர்கொண்டுள் ளது என நாம் கருதுகின்றோம். 2011ல் இந்த அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும். பிராந்திய நாடுகளா லேயே அது நிரப்பப்பட வேண் டும் என நாம் கருதுகின்றோம்.
* ஈரானை பிராந்தியத்தின் அச்சுறுத்தல் என்று கூறிவரும் இஸ்ரேல் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் புனித நிலங்களையும் பூர்வீக பூமி களையும் ஆக்கிரமித்து 6 தசாப்தங் கள் கடந்து விட்டன. ஆக்கிரமிப்பு, போர்க் குற்றம், அகம்பாவம் என்ப வற்றின் வரலாறாக அது மாறிவிட் டது. இஸ்ரேலை அங்கீகரித்துள்ள அறபு நாடுகள் அதனுடனான உறவு களை துண்டிக்க வேண்டும்.
1948 ஏப்ரல் 18ல் பலஸ்தீனர் களின் தைபீரியஸ் மண் மெனாச் சின் பேர்ஜினின் தலைமையிலான இர்குன் எனப்படும் சியோனிஸ தீவிரவாத இயக்கத்தினால் ஆக்கிர மிக்கப்பட்டது. அதிலிருந்த 5500 பலஸ்தீனர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். ஏப்ரல் 22ல் ஹைபாவை சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்தனர். அங்கிருந்து 70,000 பலஸ்தீனர்கள் விரட்டப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza