Monday, October 25, 2010

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக ஹிந்து அமைப்புகளிடையே மோதல்

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று துண்டுகளாக பங்குவைத்துக் கொடுத்து தீர்ப்பளித்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச்.

இதில் இரு பகுதிகள் ராமலல்லாவுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மூன்று தரப்பினருமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய முடிவுச் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹிந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் நிர்மோஹி அகாராவுக்குமிடையே நீதிமன்றத்தில் பங்குவைக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக தர்க்கம் துவங்கியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் தலையிடக்கூடாது எனவும், கோயிலை கட்டும் பொறுப்பு எங்களுடையது என நிர்மோஹி அகாராவின் தலைவர் மஹந்த் பாஸ்கர்தாஸ் கூறியுள்ளார்.

ராமஜென்மபூமி நியாஸ் ராமர் கோயிலை கட்டும் என்ற வி.ஹெச்.பி யின் கட்டுப்பாட்டிலிலுள்ள அமைப்பான உச்சாதிகார் சமிதியின் அறிவிப்பு நிர்மோஹி அகாராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏதேனும் கட்டிடப் பணிகளை நிர்வகிக்க வி.ஹெச்.பியையோ அதன் துணை அமைப்புகளையோ அனுமதிக்கமாட்டோம் என மஹந்த் பாஸ்கர் தாஸ் உறுதிப்படக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் எங்களுக்கு ஒரு பங்கை பிரித்து தந்துள்ளது. இன்னொரு பகுதி வழங்கப்பட்டுள்ள ராம்லல்லாவின் பிரதிநிதியாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் என்றாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ,ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அங்கு உரிமை வழங்கப்படவில்லை.கோயில் கட்டும் உரிமைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். ஹிந்துக்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள இடத்தின் உரிமை யாருக்கு என்பதுக் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

எங்களுடைய இடத்தில் ராம்லாலா வீரஜ்மான் கோயில் கட்ட அனுமதியுண்டு. ஆனால், நீதிமன்றம் பங்குவைத்த இன்னொரு பகுதி ஹிந்துக்களுக்கு எனக் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் ஹிந்து சமூகத்தின் சிறியதொரு பகுதியினருக்கு மட்டும்தான் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. உங்களுக்கு நிலத்தில் உரிமை உண்டு எனக் கூறுவதற்கு முன்னால் தீர்ப்பை வாசிக்க வேண்டும். சீதாவின் சமையலறை, ராம்சாபூத்ரா உள்ளிட்ட பகுதிகள் நிர்மோஹி அகாராவுக்கு என நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ராம்லாலா வீரஜ்மான் உள்ளிட்ட பகுதியும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தோடு இணைந்துள்ளன. ஆதலால் அங்கு கோயில் கட்டுவதற்கான உரிமை எங்களுடையதாகும்.

சாந்த் உச்சாதிகார் சமிதி,ராம்ஜென்மபூமி நியாஸ் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.ஹெச்.பியும் துவங்கிய அமைப்புகளாகும். கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸின் நிழல் அமைப்புகளாக செயல்பட்ட இவர்களை எங்களால் அங்கீகரிக்க இயலாது. என கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza