Monday, October 25, 2010

என்​க​வுன்ட்​டர்:48 மணி நேரத்திற்குள் தகவலளிக்க தேசிய மனித உரிமை ஆணை​யம் புதிய நிபந்தனை

டெல்லி,​​அக்.25:​என்​க​வுண்​டர் சம்​ப​வம் நடந்த 48 மணி நேரத்​துக்​குள் தேசிய மனித உரிமை ஆணை​யத்​துக்கு தெரி​விக்​க​வேண்​டும் என்று மாநில அர​சு​க​ளுக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டுள்​ளது.​

என்​க​வுண்டர் சம்​ப​வம் நடந்​தால் அது குறித்து தக​வல் தெரிவிப்பதற்கான புதிய விதி​மு​றை​களை தேசிய மனித உரிமை ஆணை​யம் வகுத்து வெளி​யிட்​டுள்​ளது.​ இது​தொ​டர்​பாக அனைத்து மாநி​லங்​க​ளுக்​கும் புதிய விதி​மு​றை​களை ஆணை​யம் அனுப்​பி​யுள்​ளது.​

புதிய விதி​மு​றை​க​ளின்​படி,​​ என்​க​வுன்டர் சம்​ப​வம் நடந்த 48 மணி நேரத்​துக்​குள் ஆணை​யத்​துக்கு தக​வல் தெரி​விக்​க​வேண்​டும்.​ அது​மட்​டு​மல்​லா​மல் அந்த என்​க​வுன்​டர் சம்​பந்​த​மான 2-வது அறிக்​கையை போலீ​ஸார் அடுத்த 3 மாதங்​க​ளுக்​குள் அனுப்ப வேண்​டி​யது கட்​டா​யம்.​

2-வது அறிக்​கை​யில் என்​க​வுன்ட்​ட​ரில் பலி​யா​ன​வ​ரின் பிரே​தப் பரி​சோ​தனை அறிக்கை,​​ மரண விசா​ரணை அறிக்கை,​​ மாஜிஸ்​தி​ரேட் நடத்​திய விசா​ரணை அறிக்கை,​​ மூத்த போலீஸ் அதி​கா​ரி​க​ளின் அறிக்கை ஆகி​யவை இணைக்​கப்​பட்​டி​ருக்​க ​வேண்​டும் என்று ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.​

பழைய விதி​க​ளின்​படி என்​க​வுன்ட்​டர் சம்​ப​வம் நடந்த 6 மாதங்​க​ளுக்​குள் தேசிய மனித உரிமை ஆணை​யத்​துக்கு தக​வல் தெரி​வித்​தால் போதும்.​

பழைய விதி​மு​றை​க​ளின்​படி என்​க​வுன்ட்​டர் சம்​பவ அறிக்​கையை மாநில டிஜி​பிக்​கள்​தான் அனுப்​ப​வேண்​டும்.​

ஆனால் புதிய விதி​க​ளின்​படி மாவட்ட மூத்த போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் அல்​லது போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் அனுப்​பி​னாலே போது​மா​னது.​

பழைய விதி​க​ளின்​படி போலீ​ஸô​ருக்கு எதி​ராக எழுப்​பப்​ப​டும் என்​க​வுன்ட்​டர் வழக்​கு​களை குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் மட்​டுமே விசா​ரிக்​க​லாம்.​

ஆனால் புதிய விதி​க​ளின்​படி சிறப்பு விசா​ரணை ஏஜென்​சி​கள் இந்த வழக்​கு​களை விசா​ரிக்​க​லாம்.​ சிபி​சி​ஐடி அல்​லது ஏதா​வது ஒரு சிறப்பு விசா​ரணை அமைப்பு இந்த வழக்​கு​க​ளில் விசா​ரணை நடத்​த​லாம் என ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza