Monday, April 28, 2014

ஸமீரா அலி நஜாத்:கருணையின் நிறைகுடமான அன்னை!

TOPSHOTS-IRAN-SOCIAL-EXECUTION-ISLAM
ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.

பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம்! உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மனுதாக்கல்!



பெண் போலிஸ் சர்மிளாபானு இறப்பில் மர்மம் உள்ளது. எனவே உண்மையை கண்டறிய SDPI வழக்கறிஞர் அணி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, டாக்டர்கள் குழு வைத்து மறுபிரேத பரிசோதனை(Re-postmortem)செய்வதற்கும் அதை வீடியோகிராப் செய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளது.

எகிப்தில் சிறை இன்திஃபாழா துவங்குகிறது!



எகிப்திய சிறைகளில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களை கண்டித்து அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ‘சிறை இன்திஃபாழாவை’ சிறைக்குள் போராட்டம் துவங்க உள்ளனர்.
சதிப் புரட்சியின் மூலம் அநியாயமாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரையும், ஆட்சியையும் கவிழ்த்த சர்வாதிகார ராணுவ அரசு 18 ஆயிரம் பேரை அநியாயமாக சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறை இன்திஃபாழாவில் பங்கேற்பர்.

தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்!



தமிழகத்தில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன. 2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டை ஆள பரந்த மனமே தேவை! – மோடிக்கு பிரியங்கா பதிலடி!

“நாட்டை ஆட்சி செய்வதற்கு மிகப் பெரிய மனமே தேவை. 56 அங்குலம் கொண்ட நெஞ்சு தேவையில்லை” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Wednesday, March 5, 2014

இராமநாதபுரம் தடியடியை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!



இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று (04-03-2014) மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக இராமநாதபுரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தது.
எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கிய பின்னர், பேரணி துவங்கவிருந்த நேரத்தில் மாலை 4 மணியளவில் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பேரணியை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். காவல்துறையின் இந்த சட்டவிரோதமான கொலைவெறித்தாக்குதலில் ஏராளமான முஸ்லிம்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டித்தும், முஸ்லிம் விரோதப்போக்கைக் கண்டித்தும் இன்று மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நீதி வேண்டி தொடர் போராட்டம்: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!



கோவையில் 02 - 03 - 2014 அன்று மாலை 06.00 மணிக்கு இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் K. ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Thursday, February 27, 2014

இராமநாதபுரம் தடியடி குறித்து IG அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - DGP க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 அன்று இராமநாதபுரத்தில் ஒற்றுமைப் பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக அனுமதியும் பெறப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே தடியடி தாக்குதலையும் நடத்த துவங்கினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி ரப்பர் குண்டுகள் பிரயோகப்படுத்தப்பட்டு கண்மூடித்தனமாக தாக்கி ஒற்றுமைப் பேரணி நடக்கும் இடத்தை கலவர பூமியாக மாற்றினர். இதில் வழக்கறிஞர்கள், புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், பொதுமக்கள் என 5௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காவல்துறையின் திட்டமிட்ட சதியினை உணர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் நிகழ்ச்சியை மேலும் தொடராமல் ரத்து செய்து வந்திருந்த அனைவரையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

Tuesday, February 25, 2014

இராமநாதபுரம் தடியடி: பொய் புகாரை முடித்துக்கொள்வதாக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் அறிவிப்பு!



ராமநாதபுரத்தில் கடந்த வாரம் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் பேரணியின் போது, தனது ஹோட்டலை அடித்து நொறுக்கியாகதாக புகார் அளித்தவர், போலீசாரின் மிரட்டலால் புகார் அளித்தேன் என கூறியதால் அவ்வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் சார்பில் அவர்களின் இயக்க தினமான பிப்.17 அன்று மக்கள் உரிமைக்காக ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் ஒற்றுமை பேரணியை நடத்தினர். முதலில் அனுமதி அளித்து பின்னர் பேரணி தொடங்கிய போது அனுமதி மறுத்து தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

Friday, February 21, 2014

இராமநாதபுரத்தில் நள்ளிரவில் அத்துமீறி வீடுபுகுந்து முஸ்லீம்கள் கைது! தமிழக முதல்வர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!!


இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி இன்று (21.02.2014)வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இராமநாதபுரத்தில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திடீரென அனுமதியை மறுத்து கலவரச்சூழலை ஏற்படுத்தினர்.மேலும் கண்ணீர் புகைகுண்டு,தடியடி,இரும்பு கம்பி,கற்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டனர்.காவல்துறையினரின் இக்கொடூர தாக்குதலால் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Dua For Gaza