Thursday, September 26, 2013

முஸஃபர்நகர்: பாப்புலர் ஃப்ரண்டின் துயர் துடைப்புப் பணிகள் துவங்கின!



உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸஃபர்நகர் மாவட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கியுள்ளது.
புதானா தாலுக்காவில் உள்ள டோடா கல்யாண்பூர் கிராமத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள 200 குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விநியோகிக்கப்பட்டன.

ஒரு மாதத்தில் 1,350 கோடி இந்தியாவின் முக்கிய தகவல்களை திருடிய அமெரிக்கா!


ரியோடி ஜெனீரா: ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவில் இருந்து சுமார் 1,350 கோடி தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி திட்டங்கள் குறித்த ரகசியங்களை அமெரிக்கா சேகரித்துள்ளது.
 
உலக நாடுகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக வேவு பார்த்து வருவதை அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் எட்வர்ட் ஸ்நோடென் சில மாதங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

ஹைதராபாத் சமஸ்தானம் இணைப்பு: மிகப் பெரிய முஸ்லிம் இனப்படுகொலை குறித்து வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!


புதுடெல்லி: இந்தியா 1947ம் ஆண்டு பிரிக்கப்பட்டபோது, இடம் பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது.
 
ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது.

Tuesday, September 24, 2013

விசாரணைக் கைதிகளான முஸ்லிம்களில் பெரும்பாலோர் நிரபராதிகள்!: தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்


mm

புதுடெல்லி: இந்தியாவில் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படுகின்றனர் என்று தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2012-ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி மொத்த விசாரணைக் கைதிகளில் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் 21 சதவீதம் ஆவர்.  17.75 சதவீதம் பேரை மட்டுமே  நீதிமன்றங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளன.
விசாரணைக் கைதிகளில் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 69.92 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் இதைவிட அதிகம்.

Monday, September 23, 2013

நைரோபி வணிக வளாக தாக்குதல்: சென்னை என்ஜீனியர் பலி!



கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள  வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் வகுப்புக் கலவரம்: 10 ஆண்டுகளில் 2500 பேர் பலி!



இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த வகுப்புக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 8473 கலவரங்களில் கிட்டத்தட்ட 2500 பேர் கொல்லப்பட்டதாகவும், 28.688 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முஸாஃபர் நகர் கலவரம்: கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு சிறை அதிகாரி வரவேற்பு!


bjp

உரய்: முஸாஃபர் நகர் வகுப்புக் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமிற்கு சிறை அதிகாரி கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
ஜலோன் மாவட்டத்தில் உள்ள உரய் சிறைக்குள் நுழையும் சோமிற்கு சிறை அதிகாரி எல்.பி. சிங், கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறை அதிகாரியுடன் நிற்கும் சில போலீஸ் அதிகாரிகள் சோமிற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

Saturday, September 21, 2013

ஆற்றங்கரை முதல் கோப்பேரிமடம் வரையிலான சாலையை சீரமைக்க கோரி SDPI கட்சி நடத்தும் தொடர் முழக்க போராட்டம்...!


‘மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்!’ - பாஜகவின் விமர்சனத்திற்கு எழுத்தாளர் அனந்தமூர்த்தி பதிலடி!



குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

‘உலக முஸ்லிமா 2013’ பட்டத்தை வென்றார் நைஜீரியா பெண்!


ஜகார்த்தா: 2013ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வலுக்க பாலீ தீவுக்கு அப்போட்டி மாற்றப்பட்டது.
 
இந்நிலையில் உலக அழகிப் போட்டிக்கு எதிராக முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப் போட்டி புதன்கிழமை நடந்தது. இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

Dua For Gaza