Sunday, June 30, 2013

மதுரை-ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் பகலில் கூடுதல் ரயில்


தினமும் இரவு 12 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதுரை-ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-மதுரைக்கு காலை 11.50 மணிக்கு கிளம்பும் வகையில் பாசஞ்சர் ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. 
ராமேஸ்வரத்தில் காலை 5.40க்கு கிளம்பும் ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் காலை 5.20 மணிக்கும், மதுரையில் காலை 6.40க்கு கிளம்பும் மதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் காலை 6.20 மணிக்கும் கிளம்பும். மாலையில் மதுரையில் 6.15க்கு கிளம்பிய ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் மாலை 6.05க்கும் 
ராமேஸ்வரத்தில் 5.25 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர் மாலை 6 மணிக்கும் கிளம்பும். 

Saturday, June 29, 2013

இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா!


சென்னை: இலக்கியச்சோலை வெளியீட்டகம் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாக தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது வரை நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய நாவல்களை மீண்டும் வெளியிடும் நோக்கத்திற்காக புதுயுகம் என்ற வெளியீட்டகமும் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

 இந்த வெளியீட்டகங்களின் புதிய ஆறு புத்தகங்களை வெளியிடும் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் ஜூன் 14, 2013 அன்று மாலை நடைபெற்றது. இலக்கியச்சோலை நிர்வாக குழு உறுப்பினர் குத்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியச்சோலையின் பொறுப்பாளர் அகமது ஃபக்ருதீன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Friday, June 28, 2013

சொராப்தீன் என்கவுண்டர் சாட்சி கொல்லப்பட்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்!

 அஹ்மதாபாத் : குஜராத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி கொலை செய்த காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத்தில் சொஹ்ராபுதீன் ஷேக் என்பவரும் அவர் மனைவி கவுசர் பீவியும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சொஹ்ராபுதீன் கொல்லப்பட்டார். இரண்டு நாடுகள் கழித்து அவர் மனைவி கவுசர்பீவியும் கொல்லப்பட்டார். குஜராத் மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோடியின் வலது கையும் அமைச்சருமான அமித் ஷாவும் இக்கொலைகளுக்கு பின்னால் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரின் படுகொலை மோடியின் அனுமதியுடன் நடந்தது!


M_Id_394598_Ishrat_Jahan

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் அனுமதியுடனே போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அன்றைய உள்துறை அமைச்சரும், மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான அமித்ஷாவுக்கு பங்கிருப்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சித்திரவதைக்கு ஆளானோருக்கு சர்வதேச ஆதரவு தினம்! சமூக ஆர்வலர் மீனா கந்தசாமியின் பேட்டி!

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் மீண்டும் வரும்போது ஒரு ‘சித்திரவதை கட்டமைப்பு’ என்ற நிலையில் ஆட்சி பீடங்களைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைகின்றன.திட்டமிட்ட ஆட்சியாளர்களின் மொழியின் அடித்தளத்தில் தான் உலகமெங்கும் அரசு ரீதியான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன.
பொதுவாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை கற்பனையில் உருவாக்குவார்கள்.அதற்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவார்கள்.கற்பனை எதிரிக்கு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வரலாற்றை வளைப்பார்கள்.அந்த மர்ம உலகில் மனிதர்களையும், மதங்களையும், சித்தாந்தங்களையும் சாத்தானிய சக்தியாக சித்தரிப்பார்கள்.அறிவுக்கு முற்றிலும் பொருந்தாத அந்த உலகில் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியமாகும்.

Thursday, June 27, 2013

புதுவலசையில் NWF சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் சென்ற 25.06.2013 செவ்வாய்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கிழக்குத்தெருவில்  நடைபெற்றது.


Tuesday, June 25, 2013

வட சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய இலவச மருத்துவ முகாம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



எஸ்.டி.பி.ஐ கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் சார்பாக கொளத்தூர் தொகுதி ஆர்.கே மஹாலில் இலவச மருத்துவ முகாம் நேற்று (23.06.2013)நடைபெற்றது.


இம்முகாமிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொளத்தூர் தொகுதி தலைவர் கராத்தே யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் இம்ரான் அஹமது பெய்க் வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் பணிகள் - ஓர் பார்வை



குஜராத் கலவர சம்பவங்களை முஸ்லிம்கள் மறக்கவேண்டும்- ராஜ்நாத்சிங்கின் பேச்சுக்கு அதே மேடையில் பதிலடி

 குஜராத்தில் கோத்ரா ரெயில் விபத்தைத் தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்திய வரலாறு காணாத அளவுக்கு நடத்திய கோரமான முஸ்லிம் இனப்படுகொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மறந்துவிடவேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியபோது, அதே மேடையில் வீற்றிருந்த ராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையர் பதில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘சிறுபான்மையினருக்கு எதிரான சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:–

சித்திரவதை எதிர்ப்பு தினத்தில் டெல்லியில் தர்ணா-பாப்புலர் ஃப்ரண்ட்

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமான வருகிறது ஜூன் 26-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவிருக்கிறது. ’Say no to death penalty’ (மரணத்தண்டனையை ஒழிப்போம்) என்பது இவ்வருட சித்திரவதை எதிர்ப்பு தின பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கமாக இருக்கும் என்று தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் தர்ணா போராட்டத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் துவக்கி வைக்கிறார்.

Dua For Gaza