Saturday, March 9, 2013

இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை மீண்டும் டி.ஆர்.டி.ஓவில் சேர்க்கவேண்டும் – கட்ஜு கோரிக்கை!

இஜாஸ் அஹ்மத்
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளின் பெயரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின்(டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை பணியில் மீண்டும் சேர்க்கவேண்டும் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காத சூழலில் மிர்ஸாவுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி பணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கர்நாடகா முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை போர் குற்றவாளிகளை விசாரணையின் முன் நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தீர்மானம்!


புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரத்திற்கு இச்செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் ஏழை மற்றும் சட்ட பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கம் இதனை பயன்படுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருப்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டியது. சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு செயற்குழு கோரிக்கை வைத்தது.

Friday, March 8, 2013

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை: டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!


SDPI Protest against Sri Lankan Govt at Delhi - 5
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை : இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணையை ஐ.நா நடத்த கோரியும், அதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வலியுறுத்தியும் SDPI கட்சி டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இலங்கை இராணுவம் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தது, அதோடு சர்வதேச போர் விதி முறைகளை பல்வேறு விதங்களிலும் இலங்கை அரசும் இலங்கை இராணுவமும் மீறி உள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இறுதி போருக்கு பிறகும் இன்று வரை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கையின் இனப்படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக சர்வேதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அமெரிக்காவும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

Thursday, March 7, 2013

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்



சென்னை  கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜாசேகர் நடந்துள்ளார். இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

ஆண்டு விழாவை முன்னிட்டு MMS சார்பாக விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

நமதூரில் வருகிற 9-ம் தேதி சனிக்கிழமை மதியம் 4.30 மணியளவில் 123-வது ஆண்டுவிழா நடைபெற இருக்கின்றது. அதனை முன்னிட்டு முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிரிக்கெட், கைப்பந்து, ரோந்து, அவ்வா என நமதூர் இளைஞர்களை அணியாக பிரித்து போட்டிகள் தொடங்கியுள்ளன.

6.03.2013 மாலை 5 மணியளவில் நமதூர் விளையாட்டு மைதானத்தில் ரோந்து நடைபெற்றது. இதில் ஒரு அணிக்கு 26 பேர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ரிமோஸ் தலைமையிலான அணி 11 ரோந்துகளை அடித்து வெற்றி பெற்றது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது!

புதுடெல்லி: அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப் பட்டார்.
கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது இதில்  3 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சுரேஷ் நாயர், மெகுல் பவேஷ் பட்டேல், மற்றும் ஹர்ஷத் சோலங்கி மற்றும் முகேஷ் வாசானி ஆகியோர் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல் பட்டதாக காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரிய வந்தது.

இதன் பின்னணியில் பின்பலமாக இருந்து குண்டை வெடிக்க வைக்க தயாராக இருந்த மேலும் இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் சுனில் ஜோஷி கோத்ராவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா சீரமைப்புக்கு நிதிக்காக விண்ணப்பிக்கலாம் – வக்பு வாரியம் அறிவிப்பு


Tamil-Daily-News-Paper_94962275029
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Wednesday, March 6, 2013

ஹியூகோ சாவேஸ்: ஒரு புரட்சித்தலைவனின் மரணம்….!

வெனிசுலா: இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சி என்கிற சொல்லை புதிய கோணத்தில் மறு அறிமுகம் செய்து வைத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். 1954ல் பிறந்து சாவேஸ் 1975ல் மிலிட்டரி அகாடெமியில் பட்டம் பெற்றார். கொரில்லா தாக்குதல் இல்லை... ராணுவத்தை வைத்து கலகம் செய்யவில்லை... ஒரு குண்டு கூட வெடிக்காமல், கத்தியின்றி ரத்தமின்றி முறைப்படி தேர்தலில் நின்று, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் சாவேஸ். மக்களின் மனம் கவர்ந்தவர் இந்த புரட்சி நாயகன். வெனிசூலாவில் சாவேஸ் நிகழ்த்திக் காட்டியஅமைதிப்புரட்சி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. எனவேதான் காஸ்ட்ரோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் புரட்சியாளராகவே கருதப்படுகிறார்.

அமெரிக்க எதிரி சாவேஸ் மரணம்!


அமெரிக்க எதிரி  சாவேஸ் மரணம்
கரகாஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹூகோ  சாவேஸ் (Hugo Chavez) இன்று மரணமடந்தார்.

தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு  பெற்று அதிபரான சாவேஸ் புற்றுநோயால் தமது 58 ஆவது வயதில் மரணமடைந்தது அந்நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சியாகும்.

வெனிசுலாவின் கிராமம் ஒன்றில் மண் குடிசையில் தம் பாட்டியால் வளர்க்கப்பட்ட சாவேஸ், அந்நாட்டு ஏழை மக்களால்  நேசிக்கப்பட்டவர். 1992 ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் சாவேஸ் பங்கேற்றார். அது தோல்வியில் முடிந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விடுதலையான அவர் புதிய கட்சி தொடங்கி 1998 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார்.

Dua For Gaza