Friday, November 9, 2012

வரலாறு திசைமாறும் பொழுது…!

U.S. President Obama celebrates on stage as confetti falls after his victory speech during his election rally in Chicago
உலக வரைபடத்தில் நிறவெறியால் புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு மகுடம் சூட்டும் வகையில் பெயரிலேயே நிறவெறியைக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் மாளிகையான ‘வெள்ளை மாளிகையின்’ படிக்கட்டுகளில் மீண்டும் ஒபாமா அதிபராக ஏற உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே கறுப்பு இனத்தைச் சார்ந்த ஒருவர் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறுவது இதுவே முதல் தடவை.
அமெரிக்காவின் 44-வது அதிபராக கடந்த முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் பாரக் ஒபாமா.

ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானி கருத்து


ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானிபுது தில்லி : ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே ஆட்சியை பிடித்த பி.ஜே.பியினருக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் – பெண் உறவு குறித்த புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பேசிய ராம் ஜெத்மலானி “ ராமனை எனக்கு பிடிக்காது. அவன் மோசமான கணவன். யாரோ சில மீனவர்கள் சொன்னதற்காக அபலை பெண்ணான சீதையை காட்டுக்கு அனுப்பி விட்டான்” என்று சொன்னார்.

Thursday, November 8, 2012

மேலப்பாளையத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் தேசிய கல்வி தின விழா கொண்டாட்டம்



தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நான்காம் ஆண்டு துவக்க நாளான நவம்பர் 7 அன்று CAMPUS DAY மற்றும் நவம்பர் 11 தேசிய கல்வி தினவிழா இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கலந்தாய்வு நிகழச்சி நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் K.S.தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார் . பள்ளியின் தலைமையாசிரியர் பரக்கத் உம்மா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அஸாருத்தீன் மீதான வாழ்நாள் தடை சட்ட விரோதம் - நீதிமன்றம்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முஹம்மது அஸாருத்தீன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் கிரிக்கெட் ஆடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அவருடன் சிக்கிய அஜய் ஜடேஜா,  மனோஜ் பிரபாகர் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 

15 ஆண்டு காலம் இந்தியாவிற்கு விளையாடியுள்ள அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் 6125 ரன்களும் 334 ஒரு தின போட்டிகளில் 9378 ரன்களும் எடுத்திருந்தார்

தடைக்குப் பின்னர்  அரசியல் களத்தில் இறங்கியுள்ள அஸாருத்தீன் மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார். தன் மீதான வாழ்நாள் தடை நீக்க அஸாருத்தீன் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒபாமாவிடம் நம்பிக்கை மீதமுள்ளது – முஹம்மது முர்ஸி!

Mohamed Morsi
கெய்ரோ:2-வது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிற்கு எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து முஹம்மது முர்ஸியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியது: ஒபாமாவிடம் நம்பிக்கை இன்னமும் மீதமுள்ளது. அமெரிக்காவைப் போலவே எகிப்திய மக்களின் விருப்பங்களுக்கும் ஒபாமா ஆதரவாக இருப்பார் என்று நம்புகிறோம். ஒபாமாவுக்கு முஹம்மது முர்ஸி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுவார். இவ்வாறு யாஸிர் அலி தெரிவித்தார்.

நாடார் சமூகத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து SDPI மாபெரும் ஆர்ப்பாட்டம் !


CBSE பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியதை கண்டித்தும், உண்மை வரலாற்றை பதிவு செய்ய கோரியும் SDPI கட்சி சார்பில் நேற்றுறு(7.11.2012)கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஹாஜி.S.M .ஜாகிர் ஹுசைன்தலைமை தாங்கினார்.
SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்
மாநில செயற்குழு உறுப்பினர், T ரத்தினம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

Wednesday, November 7, 2012

12 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் மனித உரிமை போராளி!


இரும்பு பெண் என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை, ரத்து செய்யக் கோரி, உண்ணாவிரதம் துவங்கி, நேற்றுடன், 12 ஆண்டுகள் ஆயின. மணிப்பூரில், ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி, இம்பால் விமான நிலையம் அருகே, அசாம் ரைபிள் படையினரால், அப்பாவி பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதில், வீர தீர செயலுக்காக, தேசிய விருது பெற்ற சிறுவனும் கொல்லப்பட்டு இருந்தான். இதை கண்டித்தும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை, ரத்து செய்யக் கோரியும், மணிப்பூரை சேர்ந்த ஐரோம் சானு ஷர்மிளா என்ற பெண், தன், 28 வயதில் , 2000ம் ஆண்டு நவம்பர், 5ம் திகதி, உண்ணாவிரதத்தை துவக்கினார். சமூக ஆர்வலரான இவர், பத்திரிகைகளில் சமூக அவலங்களை கட்டுரையாக எழுதி வந்தார். காந்திய வழியில், போராடிய ஷர்மிளா, ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல், பட்டினி கிடந்து, உலக கவனத்தை கவர்ந்தார்.
இரும்பு பெண் என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை, ரத்து செய்யக் கோரி, உண்ணாவிரதம் துவங்கி, நேற்றுடன், 12 ஆண்டுகள் ஆயின. மணிப்பூரில், ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி, இம்பால் விமான நிலையம் அருகே, அசாம் ரைபிள் படையினரால், அப்பாவி பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!

Mettupalayam-in-Coimbatore
மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் முஸ்லிம் பெண்கள்!

muslim women
புதுடெல்லி:இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி என்ற பெயரில் நர்ஸாக வேலைப்பார்க்கும் 32 வயதான ஹஸீனா பேகம் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.

ஈரான் மீது தாக்குதல்! இஸ்ரேல் மீண்டும் மிரட்டல்


டெல் அவிவ்: கடந்த சில ஆண்டுகளாக ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சந்தேகப்பட்டு வரும் நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டும்,

தொடர்ந்து அந்நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது போர் தொடுக்க உத்தரவிடுவேன்,'' என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்..

"நாங்கள் அமைதிக்கான பணியில் மட்டும், அணுசக்தியை பயன்படுத்துகிறோம்' என, ஈரான் கூறி வரும் நிலையிலும் அதை மறுக்கும் மேற்குலக நாடுகள்  அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

Dua For Gaza