Wednesday, March 28, 2012

பாகிஸ்தானுக்கு மின்சாரம் தர பரிசீலிக்கப்படும் – மன்மோகன் சிங்

PM offered Pakistan 5000 MW electricity
சியோல்:பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி தொடர்பான பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்; இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியா அந்த அந்தஸ்தை அடைய கிலானி பெருமளவில் ஆதரவு அளித்தார் என்றும் கூறினார்.

பல்வந்த் சிங் ரஜோனாவை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப்பில் முழுஅடைப்பு


Beant Singh's killer Balwant Singh Rajoana

சண்டிகர்:பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி தண்டனையை நிறைவேற்றும்படி சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டத்தால் இன்று இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியா வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு


Z-security provided to judges linked to Ayodhya Title suit

லக்னோ:அயோத்தி பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளைச் கொலைச் செய்ய இந்திய முஜாஹிதீன்(?) மற்றும் சிமி(?) திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை தெரிவித்துள்ளது.
இத்தகவலை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட  தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிந்துகொண்டதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை கூறியுள்ளது.

பாகிஸ்தானில் எம்.க்யூ.எம் தலைவர் உள்பட 10 பேர் பலி!


violence flares in Karachi

இஸ்லாமாபாத்:முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின்(எம்.க்யூ.எம்) தலைவர் மன்சூர் முக்தார் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து உருவான அரசியல் வன்முறையில் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வாகனங்கள், கட்டிடங்களுக்கு தீவைத்த எம்.க்யூ.எம் தொண்டர்கள் காராச்சி முழுவதும் போராட்டம் நடத்தினர். மன்சூர் முக்தாரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் மன்சூர் முக்தார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனை தடுக்க முயன்ற முக்தாரின் சகோதாரரையும் மர்ம நபர் சுட்டுள்ளார். இரண்டுபேரும் மரணமடைந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் நகரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!


கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!

பீஜிங்:சிரியாவில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த ஆறு அம்ச திட்டத்தை சிரியா அரசு அங்கீகரித்துள்ளது.
ஒரு ஆண்டிற்கும் மேலாக சிரியாவில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு வரும் என கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

ஃபஸல் கொலை வழக்கு: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு பங்கு!


ஃபஸல்

கொச்சி:கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை சி.பி.ஐ தேடி வருகிறது.
சி.பி.எம்(மார்க்ஸிட் கம்யூனிஸ்ட்) மாவட்ட கிளையைச் சார்ந்த தலச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த தலைவர்களை திருவனந்தபுரம் சி.பி.ஐ யூனிட் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சி.பி.எம் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சசியிடம் திங்கள் கிழமை ஆஜராக சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஆஜராகவில்லை. இதனால் இன்னொரு தினம் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணை அதிகாரி கூறுகிறார்.

எகிப்து:இஸ்லாமிஸ்டுகள் VS ராணுவம் – பகிரங்க மோதலை நோக்கி!


Egyptian army chief Field Marshall Hussein Tantawi (L) and Brotherhood General Guide Mohammed Badei have not been able to make an alliance between the two groups work

கெய்ரோ:எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி!


The death penalty is still in force in 57 countries worldwide

லண்டன்:பல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.
20 நாடுகளில் கடந்த ஆண்டு 676 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

ஷைமா அல் வாதியின் கொலை: துவேஷ பிரச்சாரத்தின் விளைவு!


Shaima Alwadi

வாஷிங்டன்:இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்துவரும் வெறுப்பைத்தூண்டும் பிரச்சாரத்தின் விளைவே நேற்று முன்தினம் அமெரிக்காவில் கொலைச் செய்யப்பட்ட ஈராக் வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதி.
’பயங்கரவாதியே நீ உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!’ என்று எழுதப்பட்ட குறிப்பு ஷைமா தலையில் அடிபட்டு கிடந்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இன துவேஷத்திற்கு(xenophobia) தனது மனைவி பலியாகிவிட்டதாக ஷைமாவின் கணவர் காஸிம் அல்ஹாமிதி நேற்று முன்தினம் கூறினார்.

அணு ஆயுத பயங்கரவாதம் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: மன்மோகன்சிங்!


PM at Nuclear Security Summit in Seoul

சியோல்:தவறான நோக்கங்களுக்காக அணு ஆயுதத் தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான மூலப் பொருள்களையும் அடைவதற்கு பயங்கரவாதிகள் முயற்சி செய்து வரும்வரை, அணு ஆயுத பயங்கரவாதம் உலகின் அமைதிக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் என்று தென்கொரியாவில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் கூறியது:

Dua For Gaza