Saturday, January 28, 2012

கர்நாடகா முதல்வர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் வாலண்டியர் ஆனார்

CM DV Sadananda Gowda, few ministers of Karnataka govt attended the event in Sangha Ganavesh
பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.

வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.

Friday, January 27, 2012

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் எண்ணெய்விலை உயரும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

Hormuz
வாஷிங்டன்:ஈரான் அரசு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1500) அதிகமாக உயரும் என்று ஐ.எம்.எப். வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தப் பிரச்னை ஏற்கெனவே சுணக்கம் அடைந்துள்ள சர்வதேச பொருளாதாரத்துக்கு ஒரு ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்று ஐ.எம்.எப். ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில்(snoop) இந்தியாவுக்கு 3-வது இடம்

email_snoop
புதுடெல்லி:கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் போலீசாரால் ரகசியமாக கண்காணிக்கப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் உலகிலேயே தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணிப்பதில் இந்தியா 3-வது இடத்தை வகிப்பதாக பிரபல இணையதள சேவை நிறுவனமான கூகிள் அறிக்கை கூறுகிறது.

பயனீட்டாளர்களின் விபரங்களை கண்டிபிடிக்க தங்களை அணுகுவதில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா உள்ளதாக கூகிளின் வெளிப்படையான(transparency) அறிக்கை கூறுகிறது.

Thursday, January 26, 2012

சிகிட்சை கிடைக்காமல் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனி

  அப்துல் நாஸர் மஃதனி
பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநீதிதமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு தொடர் சிகிட்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் சிறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீனை மறுத்த உச்சநீதிமன்றம் போதுமான தொடர் சிகிட்சையை கர்நாடக மாநில அரசு அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்து இருந்தது. ஆனால், உரிய சிகிட்சை கிடைக்காமல் மஃதனி சிறையில் அவதியுறுகிறார்.

போர்ப்ஸ் கஞ்ச்:சிறுபான்மை கமிஷனுடன் மல்லுக்கட்டும் பீகார் அரசு

போர்ப்ஸ் கஞ்ச்
புதுடெல்லி:பீகார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்சில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷனுடன் பீகார் அரசு அறிக்கை போரில் ஈடுபட்டுள்ளது.

போர்ப்ஸ் கஞ்ச் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தயாரித்த அறிக்கை பீகார் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மத்திய சிறுபான்மை அமைச்சகம் பீகார் அரசுக்கு கடிதம் எழுதியது.

மும்பை குண்டுவெடிப்பு:ஏ.டி.எஸ்ஸின் கைது நாடகம் எழுப்பும் சந்தேகங்கள்!

ஏ.டி.எஸ்ஸின் கைது நாடகம் எழுப்பும் சந்தேகங்கள்!
புதுடெல்லி:கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய 2 குற்றவாளிகளை கைது செய்ததாக கூறும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸின் நடவடிக்கைகளில் அதிகமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

டெல்லி போலீசின் இன்ஃபார்மராக செயல்பட்ட நகீ அஹ்மத் வஸி அஹ்மதின் கைது தொடர்பான சர்ச்சை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் ருஷ்டி தரம் தாழ்ந்த எழுத்தாளர் – கட்ஜு

சல்மான் ருஷ்டி தரம் தாழ்ந்த எழுத்தாளர் - கட்ஜு
புதுடெல்லி:’சாத்தானின் வசனங்கள்’ என்ற படு மோசமான நாவலை எழுதிய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ப்ரஸ் கவுன்சில் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு தரம் தாழ்ந்த எழுத்தாளர் என விமர்சித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி தரம் தாழ்ந்த எழுத்தாளர் என்பதால்தான் சமூகத்தின் பெரும்பாலான மக்கள் ‘சாத்தானிக் வெர்ஸஸ்’ நூலைக் குறித்து அறியாமல் இருக்கின்றார்கள் என கட்ஜு கூறுகிறார்.

ஈரானின் அணுசக்தியால் அபாயமில்லை – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர்

jimmy carter
வாஷிங்டன்:ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது:அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக கூறிய மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை மீறுவார்கள் என கருதவில்லை. தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என தொடர்ந்து அவர்கள் கூறி வருகிறார்கள். ஒருவேளை, அவர்கள் கூறுவது பொய்யாக இருந்தால் கூட அது ஒரு அபாயமாக மாறும் என கருதமுடியாது. ஒன்று அல்லது இரண்டு அணு ஆயுதங்களை தவிர அதற்கு அதிகமாக அணு ஆயுதங்களை ஈரானுக்கு தயாரிக்க முடியாது.

சுதந்திரத்தின் அலைகள் அடங்காத தஹ்ரீர் சதுக்கம்

Egyptians fill Tahrir Square in massive rally

கெய்ரோ:ஒரு ஆண்டிற்கு முன்பு இதைப் போன்றதொரு நாளில் தஹ்ரீர் சதுக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்று திரண்ட வேளையில் உலகம் மட்டுமல்ல எகிப்திய மக்கள் கூட கற்பனைச் செய்து பார்க்கவில்லை – அது ஒரு புரட்சி காற்றாக மாறும் என.

30 ஆண்டுகள் அதிகாரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கட்டளைகளை பிறப்பித்த முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட அக்கூட்டத்திற்கு துணிச்சல் உண்டு என யாரும் கருதவில்லை.

பொறுமை இழந்தால் அடி கொடுங்கள்: ஹஸாரே தடாலடி

ஹஸாரே

ரலேகான்சித்தி:ஊழலை கண்டு நீங்கள் பொறுமையை இழந்தால் அடி கொடுக்கலாம். அப்பொழுதுதான் மனம் அமைதி அடையும் என வலுவான ஊழல் தடுப்பு மசோதா கோரி போராட்டம் நடத்திவரும் அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.

‘கலி கலி மைன் சோர் ஹி’ என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஹஸாரே.

Dua For Gaza